Tuesday 14 July 2020

டெல்லி கலவரம்: இந்து ராஜ்ஜியத்தின் நேரடி சாட்சியம்!



டெல்லி கலவரம்: இந்து ராஜ்ஜியத்தின் நேரடி சாட்சியம்!

நாடெங்கும் குடியுரிமைச் சட்டங்களை எதிர்த்த போராட்டங்கள் பற்றி பரவுவதைக் கண்டு ஆத்திரமுற்ற பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் அப்போராட்டங்களை நசுக்குவதற்கும், அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் பொருளாதார நெருக்கடிகளை மூடிமறைத்து திசைதிருப்புவதற்கும், டெல்லியில் திட்டமிடப்பட்ட” “குஜராத் மாடல்மதக்கலவரத்தை காவல்துறை உதவியுடன் அரங்கேற்றி 40க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை படுகொலை செய்துள்ளது. ஏகாதிபத்திய யுத்த வெறியன், ‘இஸ்லாமிய எதிர்ப்புஇனவெறி பாசிஸ்ட் டிரம்ப் வருகையின் போது நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலையானது, தங்களது அமெரிக்க ஆண்டை டிரம்பிற்கு அவரது அடிமைகளான பாஜக-ஆர்எஸ்எஸ் சங்பரிவார ஓநாய் கும்பல் கொடுத்த நரபலி ஆகும்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14, 15, 17, 19, 21 மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் பிரிவு 2,7 ஆகியவற்றுக்கு எதிரான குடியுரிமைச் சட்டத்தை மோடி-அமித்ஷா கும்பல் பாராளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 8ம் தேதி நிறைவேற்றியது. அச்சட்டம் இசுலாமியர்களுக்கு மட்டுமின்றி இந்து மதத்திலேயே இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள், ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள், மற்றும் ஆதிவாசிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எதிரானது என்று புரிந்துகொண்ட மக்கள் மதம் கடந்து-சாதி கடந்து-இனம் கடந்து டிசம்பர் மாதம் முதலே போராடி வருகின்றனர். ஜாமியா பல்கலைக்கழகம் மற்றும் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடிய இஸ்லாமியர்கள் மீதான மோடி கும்பலின் அடிவருடி எடப்பாடி ஆட்சியின் பாசிச அடக்குமுறை உள்ளிட்ட எல்லாவிதமான அரச பயங்கரவாதத்தையும் எதிர்கொண்டு அஞ்சாமல் நாடெங்கும் மக்கள் ஒற்றுமையுடன் போராடி வருகின்றனர். குறிப்பாக பெண்களும் மாணவிகளும் தீரமிக்க போராட்டங்களில் ஈடுபட்டு நமது விடுதலைப் போராட்ட மரபை உயர்த்திப் பிடிக்கின்றனர். இதைக் கண்டு ஆத்திரமுற்ற ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட காவிக் கயவாளி கும்பல்கள் ரத்த வெறி பிடித்த ஓநாய் கூட்டம்போல டெல்லியில் இஸ்லாமியர்களின் ரத்தம் குடித்துள்ளது. இஸ்லாமிய வெறுப்பை கட்டியமைத்து, ‘பார்ப்பனிய வருணாசிரம கழிசடைத்தனத்தைஉயர்த்திப் பிடித்து, உள்நாட்டு நெருக்கடி, வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மையை மூடிமறைத்து, அமெரிக்க மாமனின் காலை நக்கி பிழைக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக காட்டுமிராண்டி கும்பல்களை சவக்குழிக்கு அனுப்ப மக்கள் கிளர்ந்து எழுந்து விட்டார்கள்.
மோடி ஆட்சியின் டெல்லி வெறியாட்டத்திற்கும் அஞ்சாமல் போராட்டங்கள் மென்மேலும் தீவிரம் பெற்று வரும் நிகழ்வுகள், புதிய காலனிய-இந்து ராஜ்ஜிய-நூரம்பர்க் குடியுரிமை சட்டங்களுக்கும் மோடி ஆட்சிக்கும் அடிக்கப்பட்டுள்ள சாவு மணியாகும்.
டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். கும்பலால் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான இந்த ஓநாய் வேட்டையானது, காங்கிரஸ் கும்பலால் 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளையும், குஜராத்தில் மோடி-அமித்ஷா கும்பலால் 2002ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளையும் நினைவூட்டுகிறது. 2002 குஜாரத் கலவரத்தின் போது குஜராத்தின் முதலமைச்சராக மோடியும், உள்துறை அமைச்சராக அமித்ஷாவும் இருந்தனர். தற்போது பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கைகோர்த்து டெல்லியில் குஜராத் மாடல் ஒன்றை அரங்கேற்றியுள்ளனர். மட்டுமின்றி அதை நாடெங்கும் கட்டியமைத்து கலவரங்களை தூண்ட முயற்சித்து வருகிறனர். இந்து மத வெறியன் எச்ச.ராஜா டெல்லியில் நடந்தது வண்ணாரப்பேட்டையிலும் நிகழும்என்று பகிரங்கமாக ட்விட்டரில் ஊளையிடுகிறான். கபோதி கல்யாண ராமன் என்பவன் வண்ணாரப்பேட்டை டெல்லி ஆவதற்கு முன்பு கலைந்து செல்லுங்கள்என்று முகநூலில் குரைக்கிறான். இந்துமத கோவில் கருவறைக்குள் நுழைய முடியாத அர்ஜுன் சம்பத் என்ற கயவனோ சாந்தோம் சர்ச் இருந்த இடத்தில் கபாலீஸ்வரர் கோவில் இருந்ததுஎன்று கொக்கரிக்கிறான். கோவையில் மசூதி ஒன்றின் மீது இந்து மதவெறி கும்பல் பெட்ரோல் குண்டு வீசியுள்ளது. தமிழகத்திலும் குஜராத் மாடல்டெல்லி கலவரங்களை கட்டியமைக்க இந்து மதவெறி கழிசடைக் கும்பல் முயற்சித்து வருகிறது. ஆனால் இந்துத்துவப் பாசிச மோடியின் அடிவருடி எடப்பாடி ஆட்சியோ இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு வருவதுடன் இஸ்லாம் வெறுப்பை விஷம் போல் கக்கி வருகின்றது. ‘70 ஆண்டுகள் இந்துகள் ஏமாந்துவிட்டோம், இனிமேல் சுட்டால் நாங்களும் சுடுவோம் என்று கூறி இந்து மதவெறி கலவரங்களுக்கு தூபம் போடுகிறார்’. அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
டெல்லியில் காவிகளின் வெறியாட்டம்-ஒரு திட்டமிடப்பட்ட மதக் கலவரம்
டெல்லியில் ஷாகின்பாக்கில் 70 நாட்களுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் மிகவும் அமைதியான முறையில் குடியுரிமைச் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த அறவழிப் போராட்டம் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளுக்கும் பரவியது. மோஜ்பூர் பகுதியில் டிசம்பர் மாதம் முதலே போராட்டம் நடந்து வருகிறது. சனிக்கிழமை அன்று (கலவரத்திற்கு இரு நாட்களுக்கு முன்பு அதாவது 22/2020) ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் முன்பு போராட்டம் துவங்கியது. அப்போராட்டத்தில் பெருமளவில் இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டார்கள். ஞாயிறன்று (23/2020) ஜாஃப்ராபாத்தில் சி.ஏ.ஏ. (சிகிகி) எதிர்ப்பு போராட்டம் நடக்கும் அதே இடத்தில் அதாவது மெட்ரோ ரயில் நிலையத்தில் சிஏஏ ஆதரவு பேரணியும் ஊர்வலமும் டெல்லி காவல் துறையால் அனுமதிக்கப்பட்டது. இதுவே கலவரத்தின் துவக்கப் புள்ளியாகும். இந்த ஊர்வலத்தில் பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ கபில் மிஸ்ரா என்பவனின் மதவெறி முழக்கங்களும் வன்முறையை தூண்டும் பேச்சுமே கலவரத்தை கட்டியமைத்தது. கபில் மிஸ்ராவுடன், அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் வர்மா போன்ற பாஜக தலைவர்களும் கை கோர்த்தனர். உ.பி. மாநிலத்திற்கு அருகில் இருந்ததாலும், தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பகுதிகள் என்பதாலும், தோல்வி பெற்ற பிறபகுதிகளில் இந்துகளின் வாக்கு வங்கியை உருவாக்கும் பொருட்டும் டெல்லியின் வடகிழக்கு பகுதிகள் கலவரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன.
கலவரங்கள் துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கபில் மிஸ்ரா டிவிட்டரில் எழுதிய செய்தியே டெல்லி கலவரம் என்பது நன்கு திட்டமிடப்பட்ட மதக்கலவரம் என்பதை அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது. ஜாஃப்ராபாத் மற்றும் சாந்த்பாக் பகுதிகளில் சாலையில் போராடுபவர்களை கலைக்க டெல்லி போலீசுக்கு மூன்று நாட்கள் கெடு விதிக்கிறோம் அதன் பின்பு நீங்கள் சொல்வதைக் கேட்க மாட்டோம். டிரம்ப் திரும்பிச் செல்லும் வரையில்தான் நாங்கள் அமைதி காப்போம். நாங்கள் ஜாஃப்ராபாத் நோக்கி செல்கிறோம், இந்துக்களே வீதிக்கு வாருங்கள்என்று வெளிப்படையாக மதக்கலவரத்திற்கு அறைகூவல் விடுத்தான் கபில் மிஸ்ரா. டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போதே கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் மற்றும் பரமேஷ் வர்மா ஆகியோர் இஸ்லாமியர்களைச் சுட்டுத்தள்ளுங்கள் {கோலிமாரோ} என்று முழங்கினர். அருணாச்சல பிரதேச பாஜக எம்எல்ஏ ஒருவரும் டிரம்ப் வருகையே சரியான தருணம்என்று கூறினார். இவை டெல்லியில் நடந்தவை திட்டமிடப்பட்ட மதக்கலவரம்என்பதை உறுதிப்படுத்துகின்றன.
ஜாஃப்ராபாத்தில் ஞாயிறு இரவு அன்று தொடங்கிய கலவரம், திங்கள்கிழமை கோகுல்புரி, பிரிஸ்புரி, கராவல், பஜன்புரா, மற்றும் சாந்த்பாக் பகுதிகளில் அடுத்தடுத்து கலவரங்களைத் தூண்டியது சங்பரிவார குண்டர்கள் படை. டெல்லியின் ஸ்ரீ ராம் சேனா, அனுமன் சேனா, இந்து சேனா, பஜ்ரங் தள் போன்ற ஆர்எஸ்எஸ்-சின் சங்பரிவார காவி காடையர் கூட்டமும், ஹரியானாவின் லோனி பகுதியிலிருந்து வரவழைக்கப்பட்ட பஜ்ரங்தள் குண்டர்களும், கூலிப்படையும், கிரிமினல் கும்பல்களும் என சுமார் 2000 குண்டர்கள் டெல்லி கலவரங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட காவி குண்டர் படைகள் டெல்லியின் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டு துப்பாக்கிகள், கடப்பாரை, பெட்ரோல் குண்டுகள், இரும்புத்தடி, சூலாயுதம், காவிக் கொடிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. முன்னதாகவே தயாரிக்கப்பட்ட இஸ்லாமிய வீடுகளின் பட்டியலும், இந்துக்களின் பட்டியலும் அவர்களிடம் வழங்கப்பட்டன. இந்துக்களின் வீடுகளை அடையாளப்படுத்தும் பொருட்டு முன்னதாகவே காவிக் கொடிகள் இந்து மதவெறியார்களால் ஏற்றப்பட்டன.
பிறகு போராட்டக்களத்தில் இருந்த இஸ்லாமியர்கள் மீது இரண்டு லாரிகளில் கொண்டுவரப்பட்ட கருங்கற்களைக் கொண்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளது காவிக் காடையர் கூட்டம். இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள், மசூதிகள் தீக்கிரையாக்கப்பட்டன. குர்ரான்கள் எரிக்கப்பட்டன. மசூதிகளில் அனுமன் கொடிகள் ஏற்றப்பட்டன. போராட்டக்களத்திலிருந்த இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, வீடுகளில் இருந்த இஸ்லாமியர்களையும் தேடித்தேடி தாக்கியுள்ளது இந்த ஓநாய் கும்பல். 40க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும், 10 இந்துக்களும், ஒரு காவல் அதிகாரியும் கொல்லப்பட்டதாக அரசு தரப்பு தகவல்கள் கூறுகின்றன. ஆனால் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டும் என சொல்லப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பலர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. கலவரங்கள் அனைத்தையும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியும், டெல்லி காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. டெல்லி போலீஸ் கலவரக்காரர்களுக்கு துணை போனது மட்டுமின்றி, போலீசே சிசிடிவி கேமராக்களை உடைத்த காட்சிகளும் அரங்கேறின. ஒரு போலீஸ்காரன் கற்களை எறிஎன கத்துகிறான். டெல்லி காவல்துறை காவிமயமாக்கப்பட்டுள்ளது என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன.
ஞாயிறு இரவு 11.56 மணிக்கு டெல்லி சிறுபான்மை கமிஷன் தலைவர் ஜபருல் இஸ்லாம்கான் முஸ்லீம் வாழ்விடங்கள், கடைகள், மசூதிகள் மற்றும் வணிக ஸ்தலங்கள் போன்ற டெல்லியின் பல பகுதிகள் குறிப்பாக வட கிழக்குப் பகுதிகள் பற்றி எரிகிறது; ஆயுதம் தாங்கிய குண்டர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்என சமூக வளைதளத்தில் எழுதினார். காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் காவல்துறை கண்டுகொள்ளவே இல்லை. மேலும் அவர் கூறுவதாவது:
கலவரம் உச்சத்தில் இருந்த முதல் இரண்டு நாட்களில் (24,25/02/2020) சொற்ப எண்ணிக்கையில் தான் போலீசார் இருந்தனர். இஸ்லாமியர்களும் அவர்களது சொத்துக்களும் சூறையாடப்படுவதை காவல்துறை அனுமதித்தது; கலவரக்காரர்கள் வீடுகளை சேதப்படுத்தவும் வெடி வைத்து தகர்க்கவும் காவல்துறையால் அனுமதிக்கப்பட்டனர்; கலவரத்தின் மூன்றாம் நாள் தான் (26/2020) அதிக அளவு காவல்துறை குவிக்கப்பட்டு கலவரம் குறைந்தது. அதிக அளவிலான முஸ்லிம்கள் தங்களது வாழ்விடங்களை விட்டு வெளியேறி விட்டார்கள்; அவர்கள் உள்நாட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர்; பெரும்பாலான வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே அவர்களின் மறுவாழ்வுக்கு அதிக அளவு நிதி தேவைப்படுகிறது. அரசு அளித்துள்ள நிதி போதாதுஎன்று வேதனையுடன் கூறுகிறார்.
காவிக் காடையர்களின் வெறியாட்டங்கள்
· இரத்தம் கொப்பளிக்க தரையில் விழுந்து உயிர்பிச்சை கேட்ட ஒரு இஸ்லாமியரை சூழ்ந்து கொண்டு இந்து மதவெறிக் கும்பல் ஜெய்ஸ்ரீராம் என முழங்கிக்கொண்டே அடித்தே கொல்கிறது. ராமனின் பெயரில் ஓர் அயோக்கியத்தனம்!! இந்த அயோக்கியத்தனத்தை காவல் காத்து நிற்கிறது டெல்லி போலீஸ்!
· காவி கும்பல்கள் இஸ்லாமியர்களின் வாகனங்களிலிருந்து பெட்ரோல் குண்டுகள் தயாரித்து அவர்கள் மீதே வீசி எறிந்துள்ளனர்.
·  ஷாருக் என்பவன் காவல்துறை வேடிக்கை பார்க்க அவர்கள் முன்பே துப்பாக்கியால் காவி நிறத்தில் கண்கள் சிவக்க இஸ்லாமியர்களை நோக்கி சுட்டு தள்ளுகிறான்.
·  அமீத் என்பவன் எனக்கு சி‌ஏ‌ஏ வேண்டும். வேண்டாம் என்று சொல்பவர்கள் வேறு எங்காவது செல்லலாம்என்று கத்திக்கொண்டே கையில் ஆயுதங்களுடன் இரத்த வேட்டை ஆடுகிறான்.
· ஒரு கும்பல் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லிக்கொண்டே முஸ்லீம் ஆணையும், பர்தா அணிந்த முஸ்லிம் பெண்ணையும் இரும்புத் தடிகளால் தாக்கியுள்ளது.
· கலவரக்காரர்களுடன் கைகோர்த்துக் கொண்டு காவல்துறையும் இஸ்லாமியர்கள் மீது கல்லெறிகின்றனர்.
·  அரவிந்த் குணசேகர் என்கிற பத்திரிக்கையாளரின் பற்கள் உடைக்கப்பட்டன; சவுரப், மரியம் ஆல்வி போன்றோர் தாக்கப்பட்டனர்; ஆகாஷ் என்ற பத்திரிகையாளர் மீது துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது.
· டைம்ஸ் ஆப் இந்தியாவின் ரிப்போர்ட்டர் திரு. அநிந்தியா சட்டோபாத்யா என்பவரை வழிமறித்த ஹிந்து சேனா உறுப்பினர் ஒருவன் நீங்கள் இந்து தானே? இந்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள். அங்கே ஏன் போகிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே கேமிராக்களை பிடுங்கிக் கொண்டு அடித்துள்ளான். பிறகு அவரைப் பின்தொடர்ந்து வந்து பேண்டைக் கழட்டு; நீ இந்துவா என பார்க்க வேண்டும்?” என்கிறது காவிக் கழிசடைக் கும்பல்.
· “என் பெயரை கேட்டார்கள்; பேண்டைக் கழற்றச் சொன்னார்கள்; சாஃப்ராஸ் என்று சொன்னதும் நெருப்பில் தள்ளினார்கள்என்கிறார் கோகுல்புரியைச் சேர்ந்த இஸ்லாமியர்.
·  ‘பாரத் மாதா கி ஜேஎன்று முழங்கச் சொல்லியும் தேசிய கீதம் பாடச் சொல்லியும் இஸ்லாமியர் ஒருவரை உயிருடன் கொளுத்தியுள்ளது காவிக் காட்டுமிராண்டி கும்பல்.
·  வினோத்குமார் என்ற இந்துவின் பேண்டை அவிழ்த்துப் பார்த்து இயற்கை உபாதைக்காக சுன்னத் செய்தேன் என்று அவர் கூறியதையும் கேட்காமல் அவரை அடித்தே கொன்றுள்ளது மதவெறிக் கும்பல்.
· கராவல் பகுதியைச் சேர்ந்த சபானா பர்வீன் (வயது 30) நிறைமாத கர்ப்பிணி தூக்கத்தில் இருந்த போது திடீரென்று கதவுகளை உடைத்து வீட்டுக்குள் வந்த இந்து மதவெறி ஓநாய்கள் சபானா பர்வீனின் அடி வயிற்றில் எட்டி உதைத்துள்ளனர்; பிறகு வீட்டிலிருந்த அனைவரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளது அக்கும்பல்; வீடும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. சபானாவின் மாமியார் இன்று இரவைத் தாண்ட மாட்டோம் என்று நினைத்தோம். கடவுளின் அருளால் குழந்தை தப்பித்ததுஎன்கிறார் கண்ணீர் சிந்தியபடி.
·  அலி என்பவர் என்னுடைய இரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி என் வீட்டைக் கட்டினேன்; தற்போது வீடற்ற பரதேசியாக்கப்பட்டுள்ளேன்; நான் அனைத்தையும் இழந்து விட்டேன்என்று கதறுகிறார்.
ஆர்எஸ்எஸ் சங்பரிவார ஓநாய்களின் இத்துனை அட்டூழியங்களுக்கும், காட்டுமிராண்டித் தனத்திற்கும் அயோக்கியத்தனத்திற்கும் டெல்லி காவல்துறை உடந்தையாக இருந்துள்ளது மட்டுமின்றி கலவரத்திலும் ஈடுபட்டுள்ளது. கலவரம் நடந்த நாட்களில் சுமார் 13,200 தொலைபேசி புகார்கள் டெல்லி போலீசுக்கு வந்துள்ளன. 23/2-700 புகார்கள், 24/2-3500 புகார்கள், 25/2-7500 புகார்கள், 26/2-1500 புகார்கள் வந்துள்ளன. எந்தவொரு புகாருக்கும் டெல்லி போலீசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. யமுனா விஹார் பகுதிக்கு உட்பட்ட பஜன்புரா காவல் நிலையத்திற்கு 24ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை சுமார் 3500 தொலைபேசி புகார்கள் வந்துள்ளன. எந்த புகாரையும் காவல்துறை கண்டுகொள்ளவில்லை. யமுனா விஹாரைச் சேர்ந்த பாஜக கவுன்சிலர் கலவரம் நீடித்ததற்கு காரணம் காவல் துறைதான்என்கிறார். மேலும், ‘ஷிவ் விஹார் அருகே உள்ள ராஜ்தான் பள்ளி வன்முறையாளர்களின் கட்டுப்பாட்டில் 60 மணி நேரம் இருந்தது; தொடர்ந்து காவல் துறைக்கு அழைப்பு விடுத்தேன்; இறுதிவரை காவல்துறை வரவில்லைஎன்று அப்பள்ளியின் உரிமையாளர் பைசல் ஃபரூக் கூறுகிறார்.
கலவரம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் டெல்லிக்கு அருகில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள புதானாவில் ஜோலா கிராமத்தின் வயல் வெளிகளில் ஆயுத உற்பத்திக்கு தேவையான எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அம்மாநிலத்தின் சர்த்வால் கிராமத்திலும் ஒரு ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் காவிக் காடையன் யோகி ஆட்சியிலிருந்து சங் பரிவார கும்பல்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது. கலவரம் நடக்கும் பொழுது யோகி ஆதித்யநாத் சாவதற்காக போராட வந்தவர்கள் உயிருடன் எப்படி இருக்க முடியும்?” என்று ஆணவமாகப் பேசுகிறான். டெல்லி வன்முறை வெறியாட்டங்கள் மோடி-அமித் ஷா-யோகி-கபில் மிஸ்ரா-டெல்லி போலீசு போன்ற காவி கும்பல்களால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டவை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
இதற்கிடையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் கலவரங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார். அவர் வன்முறையைத் தூண்டும் உரையின் காணொளிகள் ஆதாரமாக உள்ள போது முதல் தகவல் அறிக்கையை ஏன் பதிவு செய்யவில்லை?” என டெல்லியின் சிறப்பு காவல் ஆணையரிடம் கேள்வி எழுப்பினார். அவரை இரவோடு இரவாக, ஹரியானாவிற்கு பணி மாற்றம் செய்ய உத்தரவிட்டது மோடி-அமித்ஷா ஆட்சி. தற்போது பாஜக எடுபிடிகளைக் கொண்ட ஆய்வுக் குழுக்கள் பெயரளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளன. கலவரத்திற்கு தூபம் போட்ட கபில் மிஸ்ராவிற்கு ஒய் பிளஸ்[சீ+] என்ற 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கலவரம் நடந்த நான்கு நாட்களும் அமித்ஷா மவுனமாக கலவரக்காரர்களை வழிநடத்திக் கொண்டிருந்தார். மோடியோ டிரம்பின் காலை நக்கிக்கொண்டிருந்தார். இந்திய இராணுவமோ புல் பிடுங்கிக் கொண்டிருந்தது.
ஆர்.எஸ்.எஸ் சின் வால்தான் அரவிந்த் கெஜ்ரிவால்:
துவக்கத்திலிருந்தே குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களிலிருந்து விலகியே இருந்தார் அர்விந்த் கெஜ்ரிவால். தேர்தல் பிரச்சாரத்தின் போதும் கூட மோடி கும்பலின் இந்துத்துவப் பாசிசத்தைப் பற்றி அவர் மூச்சு கூட விடவில்லை. காரணம் அவரே ஒரு மென்மையான இந்துத்துவவாதி தான்.
தேர்தல் நேரத்திலும் கூட அனுமார் பக்தரான அவர் அனுமன் கோவிலுக்குச் சென்று இந்துக்களின் வாக்குகளை நழுவவிடாமல் பெற்றுக்கொண்டு ஆட்சியைப் பிடித்தவர் தான் இந்த ஆர்.எஸ்.எஸ் வாலான அர்விந்த் கெஜ்ரிவால்.
ஷாகின் பாக் போராட்டத்திலிருந்து கெஜ்ரிவால் விலகி நின்றது மட்டுமின்றி அங்கு ஆர்.எஸ்.எஸ் வெறியன் ஒருவனால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பற்றியும் கூட கள்ள மௌனம் காத்தார். 70 நாட்களுக்கும் மேல் நடந்து வரும் ஷாகின் பாக் போராட்டக்காரர்களை இதுவரை அவர் நேரில் சந்தித்து பேசவில்லை. ஜாமியா மிலியா, பல்கலைக் கழக மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் கழிசடைக் கும்பல்கள் நடத்திய தாக்குதலைக் கண்டிக்கக் கூடத் தயாரில்லை இந்த ஆர்.எஸ்.எஸ் வால்’. அவரது மௌனம் மிகவும் அயோக்கியத்தனமானது.
இவர் காஷ்மீர் தேசிய இனத்தை 370 உறுப்பு மூலம் இரண்டாகத் துண்டாடிய பா.ஜ.கவின் சட்டத்தை ஆதரித்தவர். மேலும் பா.ஜ.க கொண்டு வந்த 10% பொருளாதார இட ஒதுக்கீட்டையும் ஆதரித்தவர். மண்டல் கமிஷனை எதிர்த்தவர்.
கலவரம் நடந்த 4 நாட்களும் களத்திற்குச் சென்று பார்வையிடக் கூட தயாரில்லை கெஜ்ரிவால். பிறகு அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்து பேச்சுவார்த்தை ஆரோக்கியமாக இருந்ததுஎன்று வெட்கம்கெட்ட முறையில் பேட்டியளித்தார். காவிக் காடையர்களின் வெறியாட்டத்தைக் கண்டிக்காமல் இது துரதிர்ஷ்டவசமானது; பொது மக்கள் அமைதி காக்க வேண்டும்என்று கலவரத்திற்கு இசுலாமியர்கள் தான் காரணம் என்ற அர்த்தத்தில் அயோக்கியத்தனமாக பேசுகிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.
ஷாகின் பாக் போராட்டம் போக்குவரத்திற்கு இடையூறுஎன்று ஆர்.எஸ்.எஸ் பாஷையில் பேசியவர் தானே இவர்? தற்போது கன்னையா குமார் போன்ற சி.‌பி.ஐ தலைவர்கள் மீது தேசத் துரோகச் சட்டத்தை ஏவி ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு வாலாட்டுகிறார்.
டெல்லியில் இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஆதரிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்
இசுலாமிய பயங்கரவாத எதிர்ப்பு பேசி இனவெறிப் பாசிசத்தைக் கட்டியமைக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய ஓநாய் கூட்டமும், இசுலாமிய எதிர்ப்பையே தனது வாழ்வாகக் கொண்டுள்ள இந்துத்துவப் பாசிச மோடி கும்பலும் இயல்பாகவே சித்தாந்த ரீதியாகவே ஒன்றுபடுகின்றன. அமெரிக்காவின் இனவெறி பாசிசத்திற்கு மோடி கும்பலின் இந்துத்துவப் பாசிசம் சேவை செய்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் காப்புக் கொள்கைளுக்கு ஏற்றவாறு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளும் வர்த்தகக் கொள்கைகளும் மாற்றியமைக்கப்படுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம், அம்பானிகள் மற்றும் அதானிகளின் நலன்களுக்காக எல்.ஐ.சி பி.எஸ்.என்.எல், இரயில்வே, ஏர் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் பலி கொடுக்கப்படுகின்றன. இந்தியாவின் உற்பத்தி 4.7 சதமாக வீழ்ச்சியடைந்து விட்டது. 16 அம்ச திட்டம், ஒப்பந்த விவசாயம், குத்தகை விவசாயம் மற்றும் பண்ணை விவசாயம் என்னும் பெயர்களில் இந்திய வேளாண் துறையில் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் 2020 நிதிநிலை அறிக்கையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் வேளாண் நெருக்கடி மேலும் தீவிரமடைந்து விவசாயிகளைத் தற்கொலைக்கும் போராட்டத்திற்கும் தள்ளுகிறது மோடி அரசு. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவற்றின் மூலம் வணிகர்களையும் சிறு குறு தொழில்களையும் அழித்து வருகிறது‌. இது பற்றிய விவாதங்களையும், இதை எதிர்த்தப் போராட்டங்களையும் திசை திருப்பவே இந்துத்துவப் பாசிசத்தை-இந்து ராஜ்ஜிய குடியுரிமைச் சட்டங்களைக் கொண்டு வந்து, டெல்லியில் காவிக் கலவரங்களை அரங்கேற்றுகிறது ஆர்.எஸ்.ஸின் காட்டாட்சி.
டிரம்ப் வருகையின் போது கூட சுமார் 24,000 கோடி மதிப்புள்ள இராணுவ தளவாடங்கள், போர் விமானங்கள் போன்றவை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கு மோடி கும்பல் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளது. இந்திய பாதுகாப்புத் துறையில் அமெரிக்காவின் ஏகபோகத்தை அனுமதித்துள்ளது. அஹமதாபாத்தில் குடிசைகளை மறைக்க எழுப்பப்பட்ட சுவர்கள் மற்றும் டெல்லி படுகொலைகள் மூலம் அமெரிக்க நலன்களுக்காக இங்கு உருவாக்கப்பட்டு வரும் பொருளாதார நெருக்கடியை மூடி மறைக்கப் பார்க்கிறது மோடி கும்பல். டெல்லி வீதிகளில் ஜெய் ஸ்ரீராம்என்று, இசுலாமியர்களின் பிணங்களின் மீது ஏறிநின்று முழங்கியது ஆர்.எஸ்.எஸ் கும்பல். அந்த ஸ்ரீராம்வேறு யாருமல்ல; அமெரிக்க அதிபர் டிரம்ப் தான். இசுலாமியர்களின் இரத்தமே சிவப்புக் கம்பளமாக டிரம்பிற்கு விரிக்கப்பட்டது. ஆகவே, ராமராஜ்ஜியம் என்பது அமெரிக்க மாமன் ராஜ்ஜியமே.
குஜராத் படுகொலை நாயகன் நரமாமிச மோடியும், உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணான அமெரிக்காவின் அதிபர் டிரம்பும் இசுலாமியர்களின் இரத்தக் கம்பளத்தில் நடந்து வந்து கட்டியணைத்துக் கொண்டதை இந்துத்துவப் பாசிசத்தின் சில எச்சில் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக தீட்டினவே ஒழிய டெல்லி கலவரங்களைப் பற்றி எழுதவேயில்லை.
பிறகு, இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மோடிக்கு ஆதரவாகவும், டெல்லி கலவரங்கள் மற்றும் குடியுரிமைச் சட்டங்களை ஆதரித்தும் டிரம்ப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
டெல்லி வன்முறையும், குடியுரிமைச் சட்டமும் இந்திய அளவிலான பிரச்சனை. மோடி மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பவர்என்று டிரம்ப் டெல்லி கலவரங்களையும், குடியுரிமை சட்டங்களையும் கள்ளத்தனமாக ஆதரித்து விட்டுச் சென்றுள்ளார். இசுலாமியர்களை நரபலி கொடுத்து தனது ஆண்டையின் ஆசீர்வாதத்தை பெற்றுள்ளன ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க காவிக் கிரிமினல்களின் கூடாரங்கள்.
பாசிசத்தை வீழ்த்த முடியும்!!
மக்கள் ஜாதி, மதம் கடந்து வாழவே விரும்புகிறார்கள். டெல்லியில் இந்து ஒருவர் தன் உயிரை கொடுத்து 6 இசுலாமியர்களைக் காப்பாற்றியுள்ளார். சீக்கியர்கள் இசுலாமியர்களுக்கு அடைக்கலம் தந்துள்ளனர்.
இக்கலவரத்தில் இசுலாமியர்கள் மட்டுமல்லாமல் இந்துக்களும் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இந்து ராஜ்ஜியம் என்பது இசுலாமியர்களுக்கு மட்டுமன்றி இந்துகளுக்கும் எதிரானதே. இக்கலவரம் இந்து ராஜ்ஜியத்தின் நேரடி சாட்சியமாகும்.
டெல்லி மதக் கலவரங்களுக்கு தூபம் போட்ட கபில் மிஸ்ரா உள்ளிட்ட கயவர்களைக் கொலைக் குற்றத்தில் கைது செய்யக் கோரியும், கலவரங்களைக் கட்டியமைத்த இந்து சேனா, பஜ்ரங் தள், ஸ்ரீராம் சேனா, அனுமன் சேனா மற்றும் அவற்றின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் போன்ற காவிக் காட்டுமிராண்டி பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யக் கோரியும் தொடர் போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.
குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்குச் சேவை செய்யும் மக்கள் கணக்கெடுப்புத் திட்டத்தை முறியடிக்க ஒத்துழையாமை இயக்கங்களை இன்னும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். இந்து இசுலாமியர் ஒற்றுமையை நிலைநிறுத்தும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
டெல்லியில் அரங்கேற்றிய குஜராத் மாடல் வன்முறை வெறியாட்டங்களை தமிழகத்தில் அரங்கேற்றத் துடிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், எச்ச.ராஜா, அர்ஜுன் சம்பத், கல்யாண ராமன், போன்ற காவிக் கயவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மோடியின் வாலான எடப்பாடி ஆட்சியை எதிர்த்துப் பலமான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் குடியுரிமை எதிர்ப்பு போராட்டங்களைத் தடைவிதித்து இந்துத்துவப் பாசிசத்திற்கு கரசேவை செய்யும் சென்னை உயர் நீதிமன்றத்தைக் கண்டித்தும் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
இந்துத்துவப் பாசிச கும்பலின் எதிர் புரட்சிகர வன்முறை நாடெங்கும் திட்டமிட்டு குடியிரிமைச் சட்ட ஆதரவுப் போராட்டங்கள் எனும் பெயரில் கட்டியமைக்கப்படுகிறது. மாவோயிஸ்டுகள் ஆயுதங்கள் வைத்துள்ளார்கள் என்று கூறி அவர்களைச் சுட்டுத் தள்ளும் இந்த அரசு, ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரக் கும்பல்கள் சட்டவிரோதமான ஆயுதங்களின் மூலம் மக்களைச் சுட்டுத்தள்ள அனுமதிக்கிறது. எனவே இந்துத்துவப் பயங்கரவாதிகளின் மதக் கலவரங்களில் இருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் ஆயுதம் ஏந்தும் உரிமைக்காகப் போராட வேண்டும்; மக்களிடையே தற்காப்புக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில் எதிர் புரட்சிகர வன்முறையைப் புரட்சிகர வன்முறையால்தான் வீழ்த்த முடியும். அத்தகைய புரட்சிகரப் போராட்டங்களால் இந்துத்துவ பாசிச மோடி-அமித்ஷா ஆட்சியை சவக்குழிக்கு அனுப்ப முடியும்.
சமரன்,

மார்ச், 2020

No comments:

Post a Comment