Sunday 9 September 2012

ஒடுக்கப்பட்ட சார்பு நாடுகளில் அந்நிய மூலதனமின்ரி சுயேச்சையான வளர்ச்சிப் பாதை குறித்து... ஸ்டாலின்

ஒடுக்கப்பட்ட சார்பு நாடுகளில் அந்நிய மூலதனமின்ரி சுயேச்சையான வளர்ச்சிப் பாதை குறித்து...

ஸ்டாலின்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCipkrTc_qyJvP4nVkOQTc3SNIp9NYnATwgBebwLLBBQWHzM6y9iMk0ZmIS3T1qhuyHAs_31_e98Gsi-nC7m0f-56g0E-apJORAOn-18K3bx5JlcKnNN57ZQh81cwQrfwRGmLGZmT5mR7Q/s1600/Wrapper+Brown+copy.jpg
பதிப்புரை

 அந்நிய முதலீடுகளின் உதவியின்றி அதாவது ஏகாதிபத்திய நாடுகளின் முதலீடுகள் இன்றி எந்த ஒரு ஒடுக்கப்பட்ட மற்றும் சார்பு நாட்டிலும் தொழிற்துறை வளர்ச்சியை உருவாக்கவே முடியாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது, இது ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. ஏகாதிபத்தியத்தியவாதிகளும், அவர்களின் தாசர்களான மூன்றாம் உலக நாடுகளின் ஆளும் வர்க்கங்களும் இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். தீவிர வலதுசாரி பிரிவினர் முதல், திருத்தல்வாத போலிக்கம்யூனிஸ்டுகள் வரை அந்நிய முதலீடுகளின் ஆதரவாளர்களாகவே செயல்பட்டுவருகின்றனர். பத்திரிக்கைகளும், ஊடகங்களும் இக்கருத்தையே ஓயாமல் பரப்பிவருகின்றன. ஆனால் சோவியத் யூனியனின் தலைவரும், தலைசிறந்த மார்க்சியவாதிகளுள் ஒருவருமான தோழர் ஸ்டாலின் சோசலிச ரசியா உள்ளிட்டு ஒடுக்கப்பட்ட மற்றும் சார்பு நாடுகளில் அந்நிய முதலீடுகளின் உதவியின்றி சுயேட்சையான தொழிற்துறை வளர்ச்சிக்கான ஒரு புதிய மாற்றுப் பாதையை முன்வைத்தார். 1925ஆம் ஆண்டு ஜூன் - 9ல் ஸ்லெர்ட்லாவ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும்போது பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தப் பாதையை முன்வைத்துள்ளார். இந்தப்பாதைதான் இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பு, வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளெல்லாம் கடும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டபோது, சோவியத் ரசியாவை அபரிமிதமான வளர்ச்சிக்கு இட்டுச்சென்ற ஒரு புதிய பாதையாகும்.

தொழிற்துறையில் மிகவும் வளர்ச்சி பெற்ற நாடுகள் மூலதனத்தை எப்படி சேர்த்தன என்பதை வரலாற்று வழியில் தோழர் ஸ்டாலின் அதில் எடுத்துக் காட்டுகிறார். உலகத்தின் தொழிற்கூடம்என்றழைக்கப்பட்ட இங்கிலாந்து தனது காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளிலிருந்து உபரி மூலதனத்தைஉறிஞ்சுவதன் மூலம் வலிமை மிக்க தொழிற்துறையை கட்டி அமைத்தது. ஜெர்மனி, பிரான்ஸ் மீது போர்தொடுத்து, அந்நாட்டை தோற்கடித்து அதன் மீது அபராதம் விதித்து பெரும் தொகையை திரட்டியது. அதைக் கொண்டு தனது நாட்டின் தொழிற்துறையில் முதலீடு செய்தது. ஜார் கால ரசியா, மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து, அடிமைத்தனமான ஒப்பந்தங்களை ஏற்று கடும் நிபந்தனைகளின் கீழ் மூலதனத்தை பெற்று தொழிற்துறை வளர்ச்சிக்கு திட்டமிட்டது. மேற்கண்ட அனைத்து வழிகளும் பின்னிப்பிணைந்த வழியில்தான் அமெரிக்கா தொழில்வள நாடாக மாறியது என்பதை தோழர் ஸ்டாலின் விளக்கியுள்ளார். அத்துடன் மேற்கண்ட எந்த ஒரு பாதையும் சோசலிச ரசியாவிற்கு பொருந்தாது, அந்த வழிகளை ஏற்கவும் முடியாது என்று கூறி சுயேட்சையாக உள் நாட்டிலேயே மூலதனத்தை திரட்டிக் கொள்வதற்கும், அடிமைத்தனமான நிபந்தனைகள் இன்றி அந்நிய முதலீடுகள் பெற்று தொழிற்துறை வளர்க்கவும் ஒரு புதிய பாதையை இதில் அவர் முன்வைத்துள்ளார்.

    இன்று அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் செயல்படுத்திவரும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள் அந்நிய மூலதனத்திற்கு தடைகள் அனைத்தையும் அகற்றிவிட்டது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் ஆசிய ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தடையின்றி நுழைவதால் அந்நாடுகளில் தொழிற் வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக தொழிற்துறை சீரழிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக படிப்படியாக அந்நிய முதலீட்டிற்கான கதவை முழுவதுமாக திறந்துவிட்டதால் தொழிற்துறை உற்பத்தி மைனஸ் 2 சதவீதமாகவும், விவசாயம் கடும் வீழ்ச்சியையும் சந்திக்கிறது. அந்நிய முதலீட்டிற்கு கதவை அகலக் திறந்ததால் உற்பத்தி வீழ்ச்சி, ஏற்றுமதி சரிவு, நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி என நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிவிட்டது. அந்நிய முதலீடுகள் இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்கவில்லை. மாறாக நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியை சீரழிப்பதோடு நாட்டின் இறையாண்மையையும் அழித்து நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக்கி வருகிறது. அந்நிய முதலீடுகள், தாராளமயக் கொள்கைகள் இந்தியா போன்ற ஒடுக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளை மட்டும் சீரழிக்கவில்லை. முதலாளித்துவ மையங்களான அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும்கூட பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக தேக்க நிலையை சந்தித்து வருகின்றன. இன்று ஏகாதிபத்திய நிதி மூலதனம் 98 சதவீதம் உற்பத்தியல்லாத ஊக வாணிபத்திலும், பங்கு சந்தை மற்றும் லேவாதேவி மூலதனமானது செயல்படுகிறது. நிதி மூலதனம் என்றாலே பிற்போக்கு அழுகல் போக்கு என்ற லெனினின் கூற்றுக்கு சான்றாகவே திகழ்கிறது. வளர்ச்சி என்பதே ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழ் இனி சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் நாடுகளுக்கிடையிலும், ஒவ்வொரு நாட்டிற்குள்ளேயும் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்தவண்ணம் உள்ளது. காலனிய நாட்டு மக்களும், முதலாளித்துவ நாடுகளின் தொழிலாளி வர்க்கமும் கடுமையாக சூரையாடப்படுவதால் மீள முடியாத மிகு உற்பத்தியின் நெருக்கடியில் நிதிமூலதனம் சிக்கியுள்ள இந்தப் பொருளாதார முறைகளுக்கு மாற்றாக ஒரு புதிய பாதையை தோழர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார். ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமதர்ம சமுதாயத்தை நோக்கிய, மானுடத்தை முதலாளித்துவத்தின் நுகத்தடியிலிருந்து மீட்கவல்ல அப்பாதையை கடைப்பிடிக்கக்கூடிய ஒரு சுதந்திர ஆட்சியை உருவாக்கும் திசையை நோக்கி அனைத்து தேசபக்த ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டிய தருணம் இது. அதற்கு இந்தப் புத்தகம் பயனுள்ளதாக அமையும்.


சமரன்
94/177, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
(அஞ்சலகம் அருகில்)
திருவல்லிக்கேணி, சென்னை – 600 005
பேசி: 9095365292; samaranpublisher@gmail.com
 

Thursday 23 August 2012

அணுசக்தி “காலாவதியாகிவிட்டது” என்று கூறி அணு உலையை மூடு என்ற பிற்போக்கு முழக்கத்தை முறியடிப்போம்!




« அணுசக்தி காலாவதியாகிவிட்டதுஎன்று கூறி அணு உலையை மூடு என்ற பிற்போக்கு முழக்கத்தை முறியடிப்போம்!
« இந்திய அமெரிக்க இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்களை ரத்துசெய்!
« ஏகாதிபத்தியங்கள், உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளின் இலாபவெறிக்காக இயங்கும் பழைய காலாவதியான அணு உலைகளை மூடு, புதிய தொழில்நுட்ப ரீதியிலான, பாதுகாப்பான அணு உலைகளை அனுமதி!
« மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி கூடங்குளம் அணு உலையைத் திற!
« அனல், புனல், காற்று, சூரிய ஒளி, அணுசக்தி உள்ளிட்ட தேசிய மிந்திட்டத்திற்காகப் போராடுவோம்!

             
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு


சமரன் வெளியீடு: `அணு ஆற்றலும் சமூக முன்னேற்றமும்` -வில்லியம் பால்


 சமரன் வெளியீடு:

`அணு ஆற்றலும் சமூக முன்னேற்றமும்`

-வில்லியம் பால்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcI5PbNUWKHfvdyjKEc__D64sek2eXF95O4gdjPB9JxVrwupF46I-k4YZa74UfRFfOPT44D1cofEsaIp789JgbSyv1RTguHO4JEs8w0PRxVJrhBpmJ_w69JEcAqBc_Cy9EhN_wlGZAWVhw/s1600/Atom+Cover.jpg
பதிப்புரை
தோழர் வில்லியம் பால் பிரிட்டனில் சோசலிசத் தொழிலாளர் கட்சியில் சேர்ந்து பின்னர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுக் கட்சியில் இணைந்து செயல்பட்டவர். 1920களில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மார்க்சிய சித்தாந்தத்தை பரப்புவதில் மிகச் சிறந்த ஆசிரியராக திகழ்ந்துள்ளார். பல்வேறு கம்யூனிச பத்திரிகைகளில் சேர்ந்து பணியாற்றியுள்ளார்.

இரண்டாவது உலக யுத்தத்திற்குப்பின் வத்திக்கான் (போப்) தலைமையிலான கிறித்துவ திருச்சபையும், அமெரிக்காவின் இராணுவ விஞ்ஞானிகளும், நிதி மூலதனக் கும்பல்களும் அணுசக்திக்கு எதிராக பீதியூட்டி அணுசக்தியை ஏகபோகமாக்கிக்கொள்ள முயன்றனர். அணுசக்தி என்றாலே அணுகுண்டுதான், அது மனித சமுதாயத்திற்கு பேரழிவையே உண்டுபண்ணும், அணுசக்தியை ஆக்கசக்தியாக பயன்படுத்தவே முடியாது என்று பீதியூட்டி அணுசக்திக்கு எதிரான இயக்கத்தை தொடக்கி வைத்தனர். அணுசக்தியை கட்டுப்படுத்தும் ஆற்றல் மனிதர்களுக்குக் கிடையாது என்று வாதிட்டனர். 1946ல் தோழர் பால் மார்க்சிய ஆசான்களின் வழிநின்று, இந்தப் பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக கடும் தாக்குதலைத் தொடுத்தார். அணுசக்தியை ஆக்க சக்தியாக மனிதகுல முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த முடியும்; அணு ஆற்றலை மனிதன் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று உறுதியாக வாதிட்டார். வரலாற்றுப் பூர்வமாக இயற்கை ஆற்றல்களை நெருப்பு, நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அணுசக்திவரை எவ்வாறு மனிதன் அதை கட்டுக்குள் கொண்டுவந்தான் என்பதையும், அதனால் சமூகப் பொருளாதாரத் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் எடுத்துரைத்துள்ளார். அணுசக்தி வரும் காலத்தில் எப்படி வளர்ச்சியடையும், அது எப்படி நவீன பொதுவுடமைச் சமூகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை விஞ்ஞான பூர்வமாக எடுத்துரைத்துள்ளார். நெருப்பு, நிலக்கரி, அணுசக்திக்கு எதிராக மேற்சொன்ன பிற்போக்கு சக்திகள் எப்படி அச்சத்தையும், பீதியையும் ஊட்டி சமூக வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்டன என்பதையும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார்.

தோழர் வில்லியம் பால், மார்க்சிய மூலவர்களில் ஒருவரான எங்கெல்ஸ் இயற்கை சக்திகளை மனிதன் எவ்வாறு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறான் என்பதையும்; ஏகபோக முதலாளித்துவத்தின் காலகட்டத்தில் மூலதனம் உச்சபட்ச வளர்ச்சியடைந்து எப்படி உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு விலங்காக மாறிவிட்டது என்பதையும்; இனி தனியுடைமை அடிப்படையிலான, இலாப நோக்கத்தின் அடிப்படையிலான முதலாளித்துவ பொருளுற்பத்தியை தொடர முடியாது என்பதையும், உற்பத்தி சாதனங்களை அரசுடைமை ஆக்குவதன் மூலமே சமூக வளர்ச்சியடைய முடியும் என்பதையும் தனது கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் என்ற நூலில் எடுத்துக்காட்டியுள்ள அடிப்படையிலேயே தமது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளார். 
எங்கெல்ஸ் கூறுவதாவது
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMH0JEx3ou2_ZT8Vf2NPDgj_93b6amz4nPiSPZb79QRU7CSwHNmGie04DdqxHz_02sFtZy95kRA-hMFUlLS8re6fX0IOQaq8_18KyjOeYg1m0YnPUYN2XnAoBfgFZU3-0RvYEOr58V7vyZ/s1600/Engles.jpgசெயல்வன்மை வாய்ந்த சமூக சக்திகள் நாம் அவற்றைப் புரிந்து கொள்ளாமலும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலும் இருக்கும்வரை இயற்கை சக்திகளைப் போலவே கண்மூடித்தனமாகவும் பலாத்காரமாகவும் நாசகரமாகவும் செயல்படுகின்றன.ஆனால் நாம் அவற்றைப் புரிந்துகொண்டதும், அவற்றின் செயலையும் திசைவழியையும் பலன்களையும் மனத்தால்-சிந்தனையால்-பற்றிக்கொண்டதும், பிறகு அவற்றை நம் சித்தத்திற்கு கீழ்ப்படியச் செய்து அவற்றைக் கொண்டு நமது நோக்கங்களை ஈடேற்றிக்கொள்வது முற்றிலும் நம்மையே பொறுத்ததாகும். முக்கியமாக இது பேராற்றல் கொண்ட இன்றைய உற்பத்தி சக்திகளுக்கு மிகவும் பொருந்துவதாகும்... ஆனால் அவற்றின் தன்மை புரிந்து கொள்ளப்பட்டதும், ஒன்றுபட்டு வேலை செய்யும் உற்பத்தியாளர்களுடைய கரங்களில் ஆட்டிப்படைக்கும் பூதங்களாக ஆதிக்கம் புரியாமல் மனமுவந்து பணிபுரியும் பணியாளர்களாக அவற்றை மாற்றிவிடலாம்.இந்த வேறுபாடு புயலின் போது இடியிலுள்ள மின்விசையின் அழிவு சக்திக்கும்,தந்தியிலும் வோல்ட்டா மின்வில்லிலும் பணிந்து செயல்படும் மின் விசைக்கும் உள்ளது போன்றதாகும்.நாசம் விளைவிக்கும் பெரும் தீயிற்கும் மனிதனுக்கு சேவைபுரியும் நெருப்புக்குமுள்ள வித்தியாசமாகும்
மேலும் ஏகபோக முதலாளித்துவம் பற்றிக் குறிப்பிடுவதாவது;
 டிரஸ்ட்டுகளின் சுதந்திரமான போட்டி அதற்கு நேர் முரணானதாகிறது ஏகபோகமாகிறது. முதலாளித்துவ சமுதாயத்தின் உறுதியான திட்டம் ஏதும் இல்லாத பொருளுற்பத்தி படையெடுத்துவரும் சோசலிச சமுதாயத்தின் உறுதிவாய்ந்த திட்டவழியிலான பொருளுற்பத்தியிடம் சரணடைகிறது. இதுவரை இன்னமும் இது முதலாளிகளுடைய ஆதாயத்துக்காகவும் அனுகூலத்துக்காகவும் ஆனதே என்பது மெய்தான். ஆனால் இந்தச் சுரண்டல் இப்படி அப்பட்டமாக இருப்பதால் இது தகர்க்கப்பட்டே ஆக வேண்டும். இலாப வெறியர்களது ஒரு சிறு கும்பல் இப்படிப் பட்டவர்த்தனமாக சமூகத்தைச் சுரண்டுவதற்கு ஏற்பாடு செய்து டிரஸ்டுகள் நடத்தும் பொருளுற்பத்தியை எந்த தேசமும் சகித்துக் கொண்டிருக்காது. எப்படியும்,டிரஸ்டுகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முதலாளித்துவச் சமுதாயத்தின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகளாகிய அரசு கும்பல் பொருளுற்பத்தியின் நெறியாண்மையை ஏற்கவேண்டிவரும். அரசின் உடைமையாக மாற்றப்பட வேண்டிய இந்த அவசியம் தகவல் தொடர்புக்கும் போக்குவரத்துக்குமாகிய மாபெரும் ஏற்பாடுகளான அஞ்சல் நிலையம்,தந்தி,ரயில்வே ஆகியவற்றில் எல்லாவற்றிற்கும் மேலாக உணரப்படுகிறது.
மேற்கண்ட மார்க்சிய அடிப்படைகளில் ஊன்றி நின்று தோழர் பால் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.
அன்றைய காலகட்டத்தைவிட இன்று முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் அராஜகம் பல ஆயிரம் மடங்கு தலைவிரித்தாடுகையில்; மூலதனத்தின் ஒன்றுகுவிப்பு பல ஆயிரம் மடங்கு பெருகியுள்ள இன்றைய சூழலில்; மனித குலத்தின் ஆற்றல் தேவைகள் பன்மடங்கு அதிகரித்து வருகின்ற ஒரு சூழலில் இன்றும் கூட அணுசக்திக்கு எதிரான பிற்போக்கு சக்திகளின் அழிவுவாதத்தை முறியடிப்பதற்கும்; அணு ஆற்றலை விடுவித்து 100ல் 99 பேராக உள்ள பரந்துபட்ட உழைக்கும் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் இந்த வெளியீடு பயனுள்ள பங்களிப்பை செய்யும். 1946லேயே இப்படி ஒரு போராட்டத்தை தொடங்கிவைத்த தோழர் வில்லியம் பால் போற்றுதலுக்குரியவரே. இதை நாடு தழுவிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் முன் உள்ள முக்கிய பணிகளில் ஒன்றாகும்.

சமரன்
94/177, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
(அஞ்சலகம் அருகில்)
திருவல்லிக்கேணி, சென்னை – 600 005
பேசி: 9095365292
samaranpublisher@gmail.com