Wednesday 5 February 2020

தேசிய இனங்களை மத ரீதியாக துண்டாடும்
குடியுரிமைச் சட்டம், பதிவேடு மற்றும்
மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டங்களை முறியடிக்க
ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம்

இந்துத்துவ பாசிச மோடி-அமித்ஷா கும்பலின் காட்டுமிராண்டி ஆட்சியானது, குடியுரிமைச் சட்டத்தின் (CAA) நடைமுறை வடிவமான இந்தியக் குடிமகன்களின் தேசிய பதிவேடுகள் (NRIC) திட்டம் நாடெங்கும் அமல்படுத்தப்படும் என அறிவித்ததையடுத்து, இவ்விரு பாசிச ஒடுக்குமுறை திட்டங்களுக்கும் முதல் படியாக (First Step)உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு திட்டதையும் (NPR) அமல்படுத்த துவங்கிவிட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக உருவான திட்டத்தை முதன்முதலில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதுஎனும் பெயரில் இசுலாமியர்களை வெளியேற்றும் ஈனத்தனமான திட்டமாக-குடியுரிமை பற்றிய திட்டமாக முன்வைத்துள்ளது மோடியின் கழிசடை ஆட்சி. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு எனும் இந்து ராஜ்ஜியம் இதோ நம் கண்முன்னே நடைமுறைக்கு வர துவங்கிவிட்டது.
நாளொரு சட்டம்-பொழுதொரு அடக்குமுறை என்று பாசிசத்தை ஏவிவரும் மோடி ஆட்சி இந்தப் புதிய காலனிய நூரம்பர்க் குடியுரிமை சட்ட-திட்டங்களை அமல்படுத்தி சட்ட பூர்வமாக ஓர் இந்து ராஜ்ஜியத்தை நிறுவ துடிக்கிறது. இதன் மூலம் இந்தியா மீதான அமெரிக்க ஏகாதிபத்திய சாம்ராஜ்ஜியத்தையும்,இதற்குச் சேவை செய்யும் இந்தியா விஸ்தரிப்புவாத-அகண்ட பாரத ராஜ்ஜியதையும் மேலும் வலுவாக நங்கூரமிட்டு நிலை நிறுத்த முயல்கிறது தேசத்துரோக மோடி ஆட்சி. இதன் மூலம் உள்நாட்டு நெருக்கடி, வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை மூடிமறைத்து இவற்றிற்கு காரணமான ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பல்களை எதிர்த்த தேசவிடுதலைப் போரை திசை திருப்பிவிடலாம் என மனப்பால் குடிக்கிறது மங்குனி மோடி ஆட்சி. அறிவிக்கப்படாத இந்த எமர்ஜென்சி ஆட்சியைஎதிர்த்து நாடெங்கும் வீரஞ்செறிந்த போராட்டங்கள் வெடித்துக் கிளம்பி வருகின்றன.
சாதி-மத-இனப் பகைமைகளை மூட்டி பிரச்சனையை திசை திருப்பிவிடலாம் எனவும், ஆட்சியை எதிர்த்த போராட்டங்களை அடக்கி ஒடுக்கி விடலாம் எனவும் கனவில் மூழ்கிக் கிடந்த மோடி ஆட்சியின் மீது மக்கள் காரி உமிழத் தொடங்கிவிட்டார்கள். தொழிலாளர்களும், விவசாயிகளும், மாணவர்களும், வனிகர்களும், பெண்களும் சதி-மதம்-இனம் கடந்து ஓர் வர்க்கமாக அணிதிரண்டு போராடி வருகின்றனர்.
ஜெர்மனியில் அன்று, யூதர்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாஜி வதை முகாம்களில் அடைத்து இனச் சுத்திகரிப்பு(Ethnic cleansing)எனும் பெயரில் யூத இனப்படுகொலை நிகழ்த்தியது ஹிட்லர்-கோயபல்ஸ் கும்பலின் நூரம்பர்க் குடியுரிமைச் சட்டம்; இந்தியாவில் இன்று, இசுலாமியர்களின் குடியுரிமைப் பறித்து அவர்களை நாஜி முகாம் வகைப்பட்ட முகாம்களில் அடைத்து மதச் சுத்திகரிப்புஎனும் பெயரில் இசுலாமிய மதப் படுகொலைகளை நிகழ்த்துகிறது மோடி-அமித்ஷா கும்பலின் குடியுரிமைச் சட்டம். இதை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர் என்பதுதான் மோடி ஆட்சிக்கு அடிக்கப்பட்டுள்ள சாவுமணியாகும்.

தமிழகத்திலுள்ள கல்லூரிகளிலும், ஜாமியா, அலிகார், ஜே.என்.யு உள்ளிட்ட பல்கலைக் கழகங்களிலும், வட கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக அசாம், திரிபுராவிலும் மாணவர்களும் மாணவியர்களும் தீரமுடன் போராடி வருகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்ட போராளிகள் (இந்துக்கள் உட்பட) இந்து ராஜ்ஜிய மோடி அரசால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நெஞ்சில் குண்டுகள் வாங்கி மடிந்து நாட்டின் விடுதலைப் போர் மரபையும், பகத் சிங்கின் வாரிசுகள் என்பதையும் நிரூபித்து வருகின்றனர். வீட்டு வாசலில் பெண்கள் இந்தச் சட்டங்களை எதிர்த்து போர்க் கோலம்இடுகின்றனர். ஆட்சியை விட்டு வெளியேறுஎனும் முழக்கங்கள் காவிப் பரதேசிகளின் காது சவ்வைக் கிழிக்கின்றன. பா.ஜ.க குண்டர்களின் அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டு அவர்கள் மீது செருப்புகள் வீசப்படும் கண்கொள்ளா காட்சிகள் அரங்கேறுகின்றன. 56இன்ச் மோடியின் ஆதரவாளர்கள் பின்னங்கால் பிடறியில் பட ஓட்டமெடுக்கின்றனர். 56மோடியும் அமித்சாவும் அசாம் பயணங்களை இரத்து செய்து பதுங்குகின்றனர். துப்பாக்கிகளை எதிர்கொள்ள விரல்களே போதும் என நம் நாட்டின் வீரத்திருமங்கைகள் புதிய வரலாற்றை எழுதுகின்றனர். இசுலாமியர்களும் இந்துக்களும் கைகோர்த்துப் போராடி காவிக் கும்பலின் முகத்தில் கரியைப் பூசுகின்றனர். மக்கள் போராட்டங்கள் அலை அலையாக நாடு முழுக்க கிளர்ச்சி வடிவத்தை எட்டும்பட்சத்தில் மோடி ஆட்சியும், குடியுரிமைச் சட்டங்களும் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கியெறிப்படுவது திண்ணம்.
குடியுரிமைச் சட்டம், குடிமகன்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டங்களுக்கு இடையிலான தொடர்பு என்ன?
துவக்கத்தில் இம்மூன்று சட்ட திட்டங்களுக்கும் எவ்வித தொடர்பில்லை எனவும், இவை வெறும் கணக்கேடுப்பு மட்டுமே எனவும், பதிவேடுகள் திட்டம் நாடெங்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் மார்தட்டிய மோடி-அமித்ஷா கும்பல், கிளர்ந்தெழுந்த போராட்டங்களைக் கண்டு பின்வாங்கி நாடெங்கும் பதிவேடுகள் திட்டம் விரிவுபடுத்தவில்லை எனவும், மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கமான கணக்கெடுப்புதான் எனவும் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து வருகிறது.
ஆனால், இம்மூன்று சட்ட திட்டங்களுக்கும் நெருக்கமான தொடர்பிருப்பது மட்டுமின்றி ஒன்று மற்றொன்றிற்குச் சேவை செய்து இசுலாமியர்களை நாடற்றவர்களாக மாற்றும் இந்து ராஜ்ஜியத்திற்கு அடித்தளம் போடுகிறது என்பதே உண்மை.
அது குறித்து ஒவ்வொன்றாக காண்போம்.
அ) குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA -Citizenship Amendment Act)
 
குடியுரிமை மற்றும் பதிவேடு சட்ட திட்டங்களை மோடி அரசு அமல்படுத்தியிருந்தாலும், ‘மோசமான கட்சியிலுள்ள நல்ல மனிதர்என திராவிட கருணாநிதி கும்பலால் பட்டம்பெற்றவரும் ஆர்.எஸ்.எஸ். எடுபிடியுமான வாஜ்பாய் ஆட்சிதான் இவற்றைத் துவைக்கிவைத்தது. 1955 குடியுரிமைச் சட்டத்தில் அரசாணை ஒன்றை பிறப்பித்து 2003-ல் குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய அடையாள அட்டை விநியோகம் 2003என்ற குடியுரிமை விதிகளைக் கொண்டு வந்தார் வாஜ்பாய்.
மோடி கும்பல் தற்போது இந்த சட்டத்திருத்தத்தை கொண்டு வந்திருந்தாலும், 2015ம் ஆண்டிலேயே இதற்கான முன் தயாரிப்புகளை செய்யத் துவங்கிவிட்டது. அதாவது 1955 குடியுரிமைச் சட்டத்தில் செப்டம்பர் 7, 2015 மற்றும் ஜூலை 18, 2016ம் தேதிகளில் அரசாணை ஒன்றை பிறப்பித்து தற்போது அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
மோடி கும்பலின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப், ஒரிசா, மேற்கு வங்கம் மற்றும் கேரள அரசுகள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி இவை செல்லுபடியாகாது என்கிறது மத்திய அரசு.
1955 குடியுரிமைச் சட்டம் இந்தியாவின் குடிமகன் யார்? சட்டவிரோத குடியேறிகள் யார்? என்பதை பின்வருமாறு வரையறுக்கிறது:
இந்தியாவில் பிறந்த அனைவரும் குடியுரிமை பெறத் தகுதியுடையவர்கள் என்கிறது இச்சட்டம்.
யார் சட்ட விரோத குடியேறிகள்? என்பது பற்றி அது கூறுவதாவது:
உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியா வருவோரும்; உரிய ஆவனங்களுடன் வந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் இங்கு இருப்பவரும் சட்ட விரோத குடியேறிகள் (illegal immigrants)என்கிறது இச்சட்டம்.
இதில் மதம் ஒரு அளவுகோலாக வைக்கப்படவில்லை எனினும் இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிற்குள் குடியேறி இங்கேயே வாழத் துவங்கிய இஸ்லாமியர்களுக்கும், இலங்கை போன்ற அண்டை நாடுகளிலிருந்து இங்கு வரும் ஈழத்தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களுக்கும், பர்மிய அகதிகளுக்கும் (இன்றைய மியான்மர்), நேபாள அகதிகளுக்கும் காங்கிரசு கட்சி கொண்டு வந்த 1955 சட்டத்தின்படியே குடியுரிமை மறுக்கப்பட்டு இதுகாறும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டு வந்தார்கள்; வருகிறார்கள். 1955 குடியுரிமை சட்டத்தின் மூலமாகவே அண்டை நாடுகளிலிருந்து இவ்வாறு உரிய ஆவணங்களின்றி வரும் (அகதிகளுக்கு ஆவணம் ஏது?) அனைத்து மதத்தினருக்கும் காங்கிரசு கட்சி குடியுரிமை மறுத்து வந்தது. இச்சட்டத்தில் பாஜக திருத்தம் கொண்டுவந்து அதில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் குடியுரிமை மறுத்துள்ளது. 6 மதப் பிரிவினர் உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்தாலும் அவர்களுக்கு (இஸ்லாமிய மத ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருவதால்) குடியுரிமை உண்டு என்கிறது இந்துத்துவ பாசிச மோடி ஆட்சி‌. மத அடிப்படையில் இல்லாமல் பாரபட்சமின்றி அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க காங்கிரசு பாஜக கட்சிகள் தயாரில்லை.
குடியுரிமை பற்றிய காங்கிரசு கும்பலின் பாசிச நிலைப்பாடு  1985 அசாம் ஒப்பந்தத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது. இதற்கென 1987 ஆம் ஆண்டு பாசிச ராஜீவ் அரசு 1955 குடியுரிமைச் சட்டத்தில் கொண்டு வந்தது.அந்த  திருத்தமே தற்போதைய மோடி அரசின் குடியுரிமை சட்டத்திற்கு அடித்தளமாகும். பெருந்தேசிய வெறி பாசிச கண்ணோட்டத்துடன் இப்பிரச்சினையை ராஜீவ் கும்பல் அணுகியது. அதாவது வங்க தேசப் பிரிவினையின் போதும், அதற்குப் பிறகும் அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாகாணங்களில் குடியேறிய வங்கதேசத்து மக்கள் அனைவரும் (இந்து-இசுலாம் மதத்தைச் சேர்ந்த அனைவரும்) வெளியேற்றப்பட வேண்டும் என்ற அசாம் போராளி குழுக்களின் கோரிக்கையை ஏற்று 1985 அசாம் ஒப்பந்தத்தில் ராஜீவ் அரசு கையெழுத்திட்டது. அசாம் மக்களின் குறுகிய தேசிய இன உணர்வை பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு அந்த ஒப்பந்தத்தை காங்கிரசு நிறைவேற்றவில்லை. தற்போது இவர்களில் இந்துக்களை அனுமதித்து இசுலாமியர்களை மட்டும் வெளியேற்றுகிறது மோடி கும்பல்.
காங்கிரசு கும்பல் பெருந்தேசிய வெறி பாசிசத்திலிருந்து இதை அணுக, பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பலோ இந்துத்துவ பாசிசக் கண்ணோட்டத்திலிருந்து அணுகுகிறது; அவ்வளவே. அதாவது இந்து-இசுலாம் மதத்தைச் சேர்ந்த அனைத்து வங்கதேசத்து மக்கள் மீதும் பெருந்தேசிய வெறியாக - இந்திய தேசிய இன ஒடுக்குமுறையாக - தரகு முதலாளித்துவ தேசிய ஒடுக்குமுறையாக - ஏகாதிபத்திய நிதி மூலதன ஒடுக்குமுறை பாசிசமாக காங்கிரசு கும்பல் தன்னை வெளிபடுத்துகிறது எனில்; அவர்களில் இசுலாமியர்களை மட்டும் நீக்கி விட்டு இந்துக்களை அனுமதிக்கும் இந்துத்துவ பாசிசமாக -தரகு முதலாளித்துவ பாசிசமாக-ஏகாதிபத்திய நிதி மூலதன ஒடுக்குமுறைப் பாசிசமாக பாஜக கும்பல் தன்னை வெளிப்படுத்துகிறது. ஆக இரண்டின் வர்க்கப் பண்பும் ஒன்றுதான். பாசிசத்தின் வடிவம் மட்டுமே மாறுபடுகிறது,அவ்வளவுதான்.
இதன் காரணமாகவே, அசாம் ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்தியக் குடியுரிமை பெற விண்ணப்பிபவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்என 1955 குடியுரிமைச் சட்டத்தில் நிபந்தனை விதித்து 1987-ல் ராஜீவ் கும்பல் ஒரு திருத்தம் கொண்டுவந்தது. இந்த திருத்தமே வாஜ்பாய் கொண்டுவந்த சட்ட திருத்தத்திற்கும், தற்போது மோடி கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்திற்கும் வழிவகுத்துள்ளது. 2004-ல் வாஜ்பாய் ஆட்சியில் இந்த நிபந்தனை மேலும் கடுமையாக்கப்பட்டது; குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் என்பதோடு, மற்றொருவர் சட்டவிரோத குடியேறியாக இருக்கக் கூடாது என அச்சட்டம் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் திருத்தப்பட்டது. இது தெளிவாக இசுலாமியர்களை நாடற்றவர்களாக மாற்றும் உள்நோக்கம் கொண்டதாகும். தற்போது மோடியின் சட்டதிருத்தமோ வெளிப்படையாகவே, உரிய ஆவணங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இசுலாமியர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி அவர்களை நாடற்றவர்களாக அறிவித்துள்ளது; மேலும் உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும் சட்ட விரோத குடியேறிகளாக இருந்தாலும் இந்துக்கள், பார்சிகள், சீக்கியர்கள், ஜைனர்கள், கிறித்தவர்கள், பவுத்தர்கள் போன்ற 6 மதப்பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கு நிபந்தனையின்றி குடியுரிமை வழங்குகிறது. மேலும் இவர்கள் மீது கடவுச் சட்டம் 1920, வெளிநாட்டினர் சட்டம் 1946 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் இருப்பின் அவை தள்ளுபடி செய்யப்படுவது மட்டுமன்றி, காலக்கெடுவையும் 11 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக குறைத்துள்ளது.மேலும் இலக்குதேதியை 31.12.2014 என நிர்னையித்து உள்ளது. இந்த 6 மதப்பிரிவினரும் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இசுலாமிய மத ஒடுக்குமுறைக்கு ஆளாவதால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது என வெளிப்படையாக இந்து ராஜ்ஜிய திட்டத்தை பிரகடனம் செய்கிறது.
ஆறு மதப்பிரிவினரும் வெறும் மத ஒடுக்குமுறைக்கு மட்டும் ஆளாகவில்லை. அவர்கள் அரசியல்-பொருளாதார-இராணுவ ஒடுக்குமுறைக்கும் ஆளாகிறார்கள். பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இசுலாமிய மதத்தை அரசு மதமாக கொண்டிருப்பினும் (இந்தியாவின் அரசு மதம் இந்து மதம் என பாபர் மசூதி தீர்ப்பு உறுதிப்படுத்திவிட்டது) அவை பல தேசிய இனங்களைக் கொண்ட நாடுகள். தேசிய இன ஒடுக்குமுறையை வெறும் மத ஒடுக்குமுறையாக -அதுவும் இசுலாம் மத ஒடுக்குமுறையாக மட்டுமே சித்தரிக்கிறது மோடி அரசு. ஆனால் இந்துக்களை விட அதிகமாக ஒடுக்கபட்டு இங்கு வரும் பாகிஸ்தானின் அஹமதியா மற்றும் ஷியா பிரிவு முசுலிம்களுக்கும், மியான்மரின் பவுத்த பாசிசத்தால் ஒடுக்கப்பட்டு வரும் ரோஹிங்கியா முசுலிம்களுக்கும், பூடானின் கிறித்தவர்களுக்கும், ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் ஹஜாரஸ் (பிணீழீணீக்ஷீணீs) முசுலிம்களுக்கும், சிங்கள பௌத்த பேரினவாத பாசிசத்தால் ஒடுக்கப்படும் மலையகத் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கும் குடியுரிமையை மறுக்கிறது; அவர்களை நாடற்றவர்களாக அறிவிக்கிறது காவிக் கழிசடை கும்பல். காரணம், இசுலாம் மத ஒடுக்குமுறைக்கு மட்டும் ஆளாகிறார்கள் என்று கூறி ஆறு மதப் பிரிவினரின் இசுலாம் வெறுப்பை அறுவடை செய்து இந்துத்துவ பாசிசத்திற்கான சமூக அடித்தளத்தையும், அதன் மீது இந்து ராஜ்ஜிய திட்டத்தையும் கட்டியமைக்கப் பார்க்கிறது மோடி கும்பல்.
காவி கும்பலைப் பொறுத்தவரை இசுலாமியர்கள் மட்டுமே வந்தேறிகள்; சட்ட விரோத குடியேறிகள்; இவர்களே இந்துக்களின் துன்பத்திற்கும், நாட்டின் வறுமைக்கும் காரணம் என்று கூறி (காலனியாதிக்க கொள்கைகள்தான் காரணம் என்பதை மூடி மறைக்க) இந்துக்களின் மதவெறி-தேசிய வெறியைத் தூண்டி இசுலாம் வெறுப்பின் மீது (யூத வெறுப்பின் மீது ஹிட்லர் இனவெறிப் பாசிசத்தைத் கட்டியமைத்தது போல) இந்துத்துவ பாசிச ஆட்சியை நிறுவத் துடிக்கிறது. இவ்வாறு பல கோடி இந்துக்களின் மத வெறியினைத் தூண்டி அந்த சமூக அடித்தளத்தின் மீது ஒரு இந்து நாடு உருவாக்கப்பட்டால் அது அண்டை நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு அகண்ட பாரத அரசாக-இந்திய விஸ்தரிப்புவாத அரசாக இருக்கும். இது அந்த நாடுகளின் சந்தைகளை அமெரிக்க ஏகாதிபத்திய-தரகு முதலாளித்துவ கும்பல்களுக்கு தங்கு தடையின்றி திறந்துவிடுவதாக இருக்கும். அதாவது அமெரிக்காவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கு இளைய பங்காளியாக செயல்படுவது எனும் மத்திய அரசின் செயல்வடிவமாக இந்து ராஜ்ஜியம் இருக்கும்.
உண்மையில் சட்ட விரோத குடியேறிகள் யார்? இது உழைக்கும் மக்களுக்கு சொந்தமான பூமி. எந்த உழைப்பையும் செலுத்தாமல் உழைக்கும் வர்க்கத்தை சுரண்டித் தின்றுவிட்டு அவர்கள் மீதே பாசிசத்தை ஏவும் ஏகாதிபத்தியவாதிகளும், தரகு வர்க்க - நிலவுடமை கும்பல்களுமே உண்மையில் சட்ட விரோத குடியேறிகள் ஆவர். அவர்களே குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக மாற்றப்பட வேண்டியவர்கள்.
ஆ) இந்தியக் குடிமகன்களின் தேசியப் பதிவேடு (NRIC- National Registar of Indian Citizens) 

வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அசாமில் வங்கதேசப் பிரிவினையின் போதும் (1971 மார்ச் 24) அதற்குப் பிறகும் அங்கிருந்து இங்கு புலம் பெயர்ந்து வந்தவர்கள் அனைவரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற அசாம் போராளி குழுக்களின் கோரிக்கையை ஏற்று 1985ல் ராஜிவ் அரசு அசாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இதைக் கணக்கெடுக்க 2009ல் தொடுக்கப்பட்ட தனிநபர் வழக்கில், உச்சநீதி மன்றம் உத்திரவிட்டதையடுத்து பதிவேடுகள் தயாரிக்கும் பணி துவங்கி தற்போது முடிந்துள்ளது. இதுவே தேசிய குடிமகன்கள் பதிவேடு (NRC)ஆகும். அதன்படி 40 இலட்சம் பேர் குடியுரிமை பெற தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டு, பின்பு இறுதிப் பட்டியலில் 19 லட்சமாக குறைந்தள்ளது. இதில் 12 லட்சம் இந்து வங்காளிகளும், 6 லட்சம் இசுலாம் வங்காளிகளும், 1 லட்சம் அசாமியர்களும் அடங்குவர். இதில் இசுலாமியர்கள் வெளியேற்றப்பட்டு இந்துக்கள் அனுமதிக்கப்படுவர் என்றும், இலக்கு தேதியும் (Cut-Off date) 1971 மார்ச் 24 என்பதிலிருந்து டிசம்பர் 31 2014 என்று மாற்றப்படும் என்றும் மோடி கும்பல் குடியுரிமைச் சட்டம் வாயிலாக அறிவித்துள்ளது. அண்மையில் மோடி கும்பல் இந்திய-பாகிஸ்தான் பிரிவினருக்குப் பிறகு (1948 ஜூலை 19) வந்தவர்களிலும் இசுலாமியர்களை வெளியேற்றி பிற மதத்தினரை அனுமதிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் தான் தற்போது அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற்று அசாம் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் போராடி வருகின்றனர்.

டிசம்பர் 31, 2014 என்ற காலக்கெடு (Cut-Off date)நிர்ணயிக்கப்பட்டுள்ளதற்கு காரணம் 2014ம் ஆண்டு வந்தவர்களும் 2019-2020 வரை 5 ஆண்டுகள் வசித்த கணக்கில் வருவதால் அவர்களும் (6 மதப்பிரிவினரும்) குடியுரிமை பெறும் தகுதி பெறுவர் என்பதால் இந்த தேதியை மோடி அரசு நிர்ணயித்துள்ளது. இனிவரும் ஆண்டுகளில் இயல்பாகவே 5 ஆண்டுகளில் 6 மதப்பிரிவினரும் குடியுரிமை பெறுவர்.

தேசிய குடிமகன்கள் பதிவேடு திட்டத்தை (NRC) நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் வகையில், ‘குடிமகன்கள் பதிவேடு மற்றும் தேசிய அடையாள அட்டை வினியோகம் 2003விதிகளில் அரசாணை ஒன்றை பிறப்பித்து (Gazette Notification) இந்தியக் குடிமகன்களின் தேசிய பதிவேடு (NRIC) என்று பெயர் மாற்றி நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படுவதற்கான சதிவேலையை மோடி அரசு செய்துள்ளது. 31.07.2019ல் வெளியிடப்பட்ட அரசாணைக் குறிப்பு கூறுவதாவது.

2003 குடியுரிமை விதிகளில் (குடிமகன்கள் பதிவேடு மற்றும் தேசிய அடையாள அட்டை வினியோகம் 2003) பிரிவு 3ன் உபவிதி 4ன்படி, அசாமைத் தவிர்த்து நாடு முழுவதும் உள்ளூர் பதிவாளரின் (Local Registrar) அலுவலக எல்லைக்குள் ஒருவர் வாழ்கின்றாரா என்பது குறித்து அனைவரிடமும் தகவல் சேகரிக்கும் பணிக்காக, மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டைத் தயாரித்து செழுமைப்படுத்தி களப்பணிக்கு தயாராக வேண்டும். தகவல் சேகரிக்கும் பணியானது 01.04.2020 முதல் 31.09.2020 வரை நடைபெறும்.என்கிறது. 

இந்த அரசாணைக் குறிப்பானது தேசிய பதிவேடுகள் திட்டம் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்பதையும், மக்கள் தொகை கணக்கெடுப்பதற்கும் குடியுரிமை பதிவேடு திட்டங்களுக்கும் உள்ள உறவையும் எடுத்துக்காட்டுகின்றன. அசாமிற்காக கொண்டுவரப்பட்ட தேசியப் பதிவேடுகள் (NRC) திட்டம், இந்தியா முழுமைக்கும் இந்தியக் குடிமகன்களின் தேசியப் பதிவேடு திட்டம் (NRIC) எனும் பெயரில் அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் (NRIC)அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களுக்கு பொருந்தும் என இந்தியாவின் கோயாபெல்ஸ் அமித்ஸா அறிவித்துள்ளார். இதன்படி மாநிலம் தோறும் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டு அதில் குடிமகன்கள் தாங்கள் இந்தியாவில்தான் பிறந்தோம் என தாமாகவே நிரூபித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாதவர்கள் வதை முகாம்களில் அடைக்கப்படுவர் என்கிறது மோடி கும்பல், அம்முகாமிற்கு தடுப்பு முகாம்என்று ஈனத்தனமாக பெயரிட்டுள்ளது இக்கும்பல். இது நாஜி முகாம்களுக்கு இணையான வதை முகாம்களாகும். 

இ) தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு  (NPR - National population Register)

மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தை முதன்முதலில் இந்து ராஜ்ஜியம் அமைப்பதற்கான குடியுரிமைச் சட்டங்களாக முன் வைத்துள்ளது காவி காடையர் கூட்டம். மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டமே குடியுரிமை மற்றும் பதிவேடுகள் சட்டங்களுக்கு முதல்படியாகும். இத்திட்டத்திற்கும் இந்திய குடிமகன்களின் பதிவேடுகள் திட்டத்திற்கும் உள்ள தொடர்பை 2003 குடியுரிமை விதிகளில் கொண்டு வரப்பட்டுள்ள அரசாணை குறிப்பு பின்வருமாறு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது;
தேசிய குடிமகன்கள் பதிவேடு தயாரிக்கும் பணிகளுக்கு முதல்படி மக்கள் தொகை கணக்கெடுப்புத் திட்டமே என்று அரசாணை குறிப்பே கூறுகிறது. 2003 குடியுரிமை விதிகளில் உபவிதி 5 கூறுவதாவது:
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பதிவேட்டிலிருந்து குடிமகன்களின் விவரங்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பிறகு அவற்றை இந்தியக் குடிமகன்களின் உள்ளூர் பதிவு அலுவலர் (Local Registrar) பராமரித்து நிர்வகிப்பார்என்கிறது மேலும் வீடுவீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி 01.04.2020 முதல் 30.09.2020 வரை நடைபெறும் எனவும் அக்குறிப்பு கூறுகிறது.
மிகவும் மையமான விஷயம் என்னவெனில், கணக்கெடுப்பு படிவத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 6 கேள்வி-பதில் பத்திகள் முழுக்க இசுலாமியர்களை குறி வைக்கும் நோக்கோடு கேட்கப்பட்டுள்ளன என்பதே.
கணக்கெடுப்பு படிவத்தின் பக்கம் 2ல் பத்தி 3 (Column-3)பின்வருவனவற்றைக் கோருகிறது:
அம்மா, அப்பா பிறந்த தேதி; இந்தியாவிற்குள் பிறந்திருந்தால் மாநிலம் மற்றும் மாவட்டத்தின் பெயரைக் குறிப்பிடவும்; இந்தியாவிற்கு வெளியே பிறந்திருந்தால் நாட்டின் பெயர் மற்றும் (பதில் தரப்படவில்லை எனில் பின்னர் தெரிவிக்க வேண்டும்) மாவட்டத்தின் பெயரை குறிப்பிடவும்என கேட்கப்பட்டுள்ளன.
இக்கேள்விகள் ஐயத்திற்கிடமின்றி 1948 ஜூலை 19 (பாகிஸ்தான் பிரிவினை) மற்றும் 1971 மார்ச் 24 (வங்கதேசப் பிரிவினை) தேதிகளை மனதிற்வைத்தே கேட்கப்பட்டுள்ளன.
மோடி அரசு மக்களின் போராட்டங்களைக் கண்டு அஞ்சி இக்கேள்விகள் கட்டாயம் இல்லை; சுய விருப்பம் அடிப்படையில் பதில் அளிக்கலாம்என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. ஆதார் கட்டாயம் இல்லை என்று சொல்லிக் கொண்டேதான் மோடி கும்பல் அனைவருக்கும் கட்டாயப்படுத்தியது நாம் மறக்கவில்லை.
எனவே இக்கேள்விகள் இரு பிரிவினைகளின் போதும், பிரிவினைகளுக்குப் பிறகும் இந்தியா முழுவதும் குடியேறி இங்குள்ள தேசிய இனங்களுடன் ஒன்று கலந்துவிட்ட இசுலாமியர்களின் குடியுரிமையைப் பறித்து நாடற்றவர்களாக, சட்ட விரோத குடியேறிகளாக-இரண்டாம் தர குடிமக்களாக மாற்றி அவர்களை வதை முகாம்களில் அடைக்கும் ஈனத்தனமான இந்து ராஜ்ஜிய திட்டமே ஆகும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு (NPA) திட்டமானது, 31.07.2019 தேதியன்று அரசாணைக் குறிப்பின் மூலம் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்ட 2 நாட்களுக்கு முன்புதான் மத்திய அரசானது எல்லா மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் சட்டவிரோத குடியேறிகளை அடைப்பதற்கான தடுப்பு முகாம்கள் (Detention Centre) அமைக்கும் பணிகளை துவங்குமாறு ஆணையிட்டு உள்ளதாக பல தேசிய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பதற்கும், குடியுரிமைச் சட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என மோடி கும்பல் கோயாபல்ஸ் பிரச்சாரம் செய்து வருகிறது. அமித்ஷாவின் பின்வரும் கூற்றே அவர்களின் பொய்யை அம்பலப்படுத்துகிறது;
மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளூர் அளவில் தயாரிக்கப்படுகிறது. 1955 குடியுரிமைச் சட்டம் மற்றும் குடியுரிமை விதிகள் 2003- ஆகியவற்றின் (1955) உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கிராமம், சிறு நகரம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் தயாரிக்கப்படுகிறதுஎன்கிறார் அமித்ஷா.
அமித்ஷா 1955 சட்டத்தின் படி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கூறுவது அப்பட்டமான பொய்யாகும். 1955 சட்டம் என்பது 2019 குடியுரிமைச் சட்டமாக மாற்றப்பட்டுவிட்டது. 2003 குடியுரிமை விதிகளும், அரசாணையும் தேசிய குடிமகன்கள் பதிவேட்டிற்குச் சேவை செய்கிறது; மக்கள் தொகை கணக்கெடுப்பு இவற்றின் முதல்படியாக  (First Step) உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு அவை தேசிய குடிமகன்கள் பதிவேடுகளில் ஏற்றப்படும். பிறகு குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு இசுலாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக அறிவிக்கப்பட்டு நாடெங்கும் தயாராகிவரும் வதை முகாம்களில் அடைக்கப்படவுள்ளனர். பணக்கார இசுலாமியரின் சொத்துகளைப் பறிமுதல் செய்வது; ஏழை இசுலாமியரைக் கொன்று விடுவது எனும் ஆர்.எஸ்.எஸ் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. 

புதிய காலனியாதிக்கத்தின் விளைவாக நடக்கும் புலம் பெயர்தலும், புலம் பெயர்பவர்களின் கூலி உழைப்பை வதை முகாம்களில் அடைத்து காலனியாதிக்கத்திற்காக மீண்டும் சுரண்டுதலும்
ஒரு தேசிய இனத்திற்குள்ளும், தேசிய இனங்களுக்கிடையிலும், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற காலனிய அடிமை நாடுகளுக்கிடையிலும் எல்லா மதங்களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் புலம் பெயர்வதற்கு காரணம் இந்நாடுகளில் நிலவும் புதிய காலனிய-தரகு-முதலாளித்துவ- நிலவுடைமை உற்பத்தி முறையினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியே  (Uneven Development) ஆகும். இந்த சமசீரற்ற வளர்ச்சியும் அதனால் ஏற்படும் நெருக்கடியும், வறுமையும் வேலைவாய்ப்பின்மையும், இதனால் மக்கள் பிழைப்பிற்காக கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு புலம் பெயர்வதும் ஏகாதியத்திய நிதிமூலதன ஆதிக்கத்தின் தவிர்க்க இயலாத விதியாகும் (Law of Imperialist Finance Capital). இந்த உற்பத்தி முறைக்குச் சேவை செய்யும் புதிய காலனிய-புதிய தாரளமய-கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளால் இலட்சக்கணக்கான விவசாயிகள் செத்து மடிவதும், கிராமங்கள் காலியாவதும், மக்கள் புலம் பெயர்வதும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. தொழிற்சாலைகள் கார்ப்பரேட் கம்பெனிகளின் சேவை மையங்களாக மாற்றப்படுவதாலும், தொழிலாளர் நலச் சட்டங்கள் ஒழிக்கப்பட்டு வருவதாலும், தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்படுகின்றனர். படித்தவர்கள் வேலை தேடுவதையே வேலையாக் கொண்டு மனநோயாளிகளாகி வருகிறார்கள். எனவே இவர்களின் இடம் பெயர்வுகள் தடுக்க முடியாததாகி விட்டன. இந்த இடம் பெயர்வுகளை சட்டங்களாலும், உள்நாட்டு பாஸ்போர்ட் (ILPS -Inner Line Permit System) மற்றும் விசா முறைகளாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. நிலவுகிற உற்பத்தி முறையை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம தகர்த்தெறிந்து மக்கள் ஜனநாயக சர்வாதிகார குடியரசை நிறுவினால்தான் புலம் பெயர்தல்களை தடுத்து நிறுத்த முடியும்.அசாம், மணிப்பூர், தமிழகம் உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை அப்போதுதான் வெல்ல முடியும்.

இந்தியாவில் 42 கோடி கட்டிட தொழிலாளர்கள் (இந்துக்கள்)எந்த ஆவணங்களும் இல்லாமல் வாழ்கின்றனர். குடியுரிமை சட்டங்களால் இவர்கள் நேரடியாக பாதிக்கப்படுவர். இவர்களுக்கு நிலையான வீடு இல்லை. அலைந்து திரியும் நாடோடிகளாக செத்து மடிகின்றனர். 3 மாதம் கர்நாடகா, 3 மாதம் ஆந்திரா, 3 மாதம் மும்பை என அலைந்து திரியும் குழுக்களாக ஒரு துன்பியல் வாழ்வை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். அர்ஜூன் சென் குப்தா கமிட்டி அறிக்கையானது இந்தியாவில் 84 கோடிபேர் 28 நாட்களுக்கு மேல் ஒரிடத்தில் தங்கி வேலை செய்வதில்லைஎன்கிறது. இந்த 84 கோடி ஒடுக்கப்பட்ட மக்களும் (இந்துக்களும்) உள் நாட்டு அகதிகளாக அலைந்து திரிகின்றனர். தமது கூலி உழைப்பை மேலான விலைக்கு விற்பதற்காக மாநிலம் விட்டு மாநிலமும்-மாநிலத்திற்குள்ளும்-அண்டை நாடுகளுக்கும் புலம் பெயர்கின்றனர். இவர்களிடமும் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே இவர்களும் வதை முகாம்களில்-திறந்த வெளி சிறைச்சாலைகளில் அடைக்கப்படவுள்ளனர். ஏன்? தற்போது இவர்களின் கூலி உழைப்பு சிதறிக் கிடக்கின்றது. இன்னும் முறையாக அமைப்பாக்கப்படவில்லை. சிதறிக் கிடக்கும் இந்த கூலி உழைப்பையும் கொத்தடிமைத் தனத்தையும் வதை முகாம்கள் மூலம் நிறுவனப்படுத்தி, கார்ப்பரேட் கும்பல்களுக்கு நிறுவனப்படுத்தப்பட்ட கூலி உழைப்பை தாரை வார்க்கிறது காவி கழிசடை ஆட்சி. இதுவே ஆதி திரட்டல் சுரண்டல் முறையாகும். பழைய காலனியத்தில் திருச்சபைகள் செய்த இந்த வேசித்தனத்தை,தற்போது புதிய காலனியத்தில் மோடி கும்பலின் இந்த ராஜ்ஜியம் செய்கிறது. இதற்கனவே கட்டற்ற தடையற்ற அந்நிய நிதி மூலதன வருகையை உத்திரவாதப்படுத்தும் சர்வதேச நிதிச்சேவை மையச் சட்டத்தின் (மிதிஷிசி) நிறைவேற்ற உள்ளது மோடி அரசு. 
இந்துக்களுக்கு எதிரான இந்து ராஜ்ஜியமும் அதன் வதை முகாம்களும்
இந்து ராஜ்ஜியம் என்பது ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலின் இந்துத்துவக் கோட்பாட்டினுடைய அரசு வடிவமாகும். இந்தியாவிலும், அண்டை நாடுகளிலும் உள்ள இந்துக்களின் (பின்தங்கிய வாழ்நிலையால் பலப்படும்) இந்து மத உணர்வை இஸ்லாமியாக்ளுக்கு எதிரான இந்து மத வெறி மற்றும் தேசிய வெறியாகத் தூண்டி கோடிக்கணக்கான அம்மக்களின் சமூக அடித்தளத்தின் மீது கட்டப்படும் ராஜ்ஜியமே இந்து ராஜ்ஜியம் (அ) இந்து ராஷ்டிரா (அ) இந்து நாடு திட்டமாகும். இது அண்டை நாடுகள் மீதான இந்திய விஸ்தரிப்பு வாத-அகண்ட பாரத அரசு அமைப்பதையும், அதன் மூலம் வலுவான புதிய காலனியை சாம்ராஜ்ஜியத்தையும் நிறுவும் நோக்கம் கொண்டதாகும்.
இந்து ராஜ்ஜியம் பல கட்டங்களைக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசப் பிரிவினைகளின் போது இங்கு குடிபெயர்ந்து தங்கியுள்ள கோடிக்கணக்கான இசுலாமியர்களை நாடற்றவர்களாக மாற்றுவது; பூடான் கிறித்துவர்கள், ரோஹிங்கியா இசுலாமியர்கள், ஆப்கனின் ஹஜாரா இசுலாமியர்கள், பாகிஸ்தானின் அஹமதியா மற்றும் ஷியா இசுலாமியர்களை நாடற்றவர்களாக மாற்றுவது; இந்தியாவிலேயே பிறந்து வாழும் இசுலாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவது; இந்து மதத்திலேயே இருக்கிற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களையும், ஈழத்தமிழர்கள் மற்றும் பழங்குடிகளையும் நாத்திகர்களையும் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவது; தேசிய இனங்களை மத அடிப்படையில் துண்டாடிய பிறகு வன்னியர் நாடு-பறையர் நாடு-கொங்கு நாடு என சாதி அடைப்படையில் துண்டாடுவது; காஷ்மீர், தனித்தெலுங்கானா மற்றும் ஜார்கண்ட் பாணியில் தேசிய இனங்களை துண்டாடுவது; சாதி-மத-இனக் கலவரங்களாலும் பேரிடர்களாலும் ஆவணங்களை இழந்தவர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவது; இந்தியாவின் பெரு நகரங்களை (சென்னை, ஹைதராபாத்) டெல்லியைப் போன்று காஷ்மீரைப் போன்று அதிகாரமற்ற யூனியன் பிரதேசங்களாக-பஞ்சாயத்து கவுன்சில்களாக மாற்றுவது; ஒரு கோடி பேருக்கு ஒரு மாநிலம் என தேசிய இனங்களை துண்டாடி மீண்டும் சமஸ்தான ஆட்சியை நிறுவுவது; உள்நாட்டு அகதிகளாக இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்பட்டவர்களை வதை முகாம்களில் அடைத்து தேசிய இன உருவாக்கத்தை சுக்கு நூறாக்கி ஏகாதியத்திய எதிர்ப்பு தேச விடுதலை உணர்வை நசுக்குவது; இசுலாமியர்களை குடியுரிமை பெறாத கூலி அடிமைகளாகவும், இந்துக்களை குடியுரிமை பெற்ற கூலி அடிமைகளாகவும் மாற்றுவது; அதன் மூலம் இந்திய விஸ்தரிப்புவாத-அகண்ட பாரத -புதிய காலனிய சாம்ராஜ்ஜியத்தை வலுவாக நிலைநிறுத்தி மத்திய காலச் சுரண்டலுக்கு -ஆதி திரட்டல் வடிவிலான சுரண்டலுக்கு -கிழக்கிந்திய கம்பனி ஆட்சி வடிவிலான சுரண்டலுக்கு நாட்டை ஆட்படுத்துவது என பல கட்ட தேசத்துரோக செயல்தந்திரங்களைக் கொண்டது தான் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களின் இந்து ராஜ்ஜியத் திட்டமாகும்.
ஏகாதியத்திய ராமராஜ்ஜியம் எனப்படும் இந்து ராஜ்ஜியத்தின் மன்னர்களாக-ராமர்களாக ஏகாதித்திய நிதியாதிக்க கும்பல்களே விளங்குவர். அனுமார்களாக அம்பானிகளும்-மூப்பனார்களும்--யாதவர்களும் (தரகு முதலாளிகளும் நிலவுடமையாளர்களும்) விளங்குவர். இந்த எதிர்புரட்சிகர ராஜ்ஜியத்தில் இசுலாமியர்களும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களும் ஈழத்தமிழர்களும் (அதாவது ஆர்.எஸ்.எஸ் பாஷையில் இந்துக்களும்), நாத்திகர்களும் வதை முகாம்களில் அடைக்கப்பட்டு இவர்களுக்கு அதாவது பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொத்தடிமை வேலை செய்யும் கூலி அடிமைகளாக அத்துக் கூலிகளாக அறுபட்டுச் சாவர். 
வதை முகாம்கள் அமைப்பது என்பது தேசிய இனங்களை நிரந்தரமாகத் தூண்டாடும் மாபெரும் தேசத்துரோகச் செயலாகும். உதாரணமாக, பீகாரிகள் கர்நாடகா-தமிழகத்திலும், தமிழர்கள் மும்பை-கர்நாடகாவிலும், கன்னடர்கள் கோவாவிலும் வதை முகாம்களில் அடைக்கப்படவுள்ளனர். இது தேசிய இனங்களுக்கிடையில் ஓயாத சாதி, மத இனக் கலவரங்களை கட்டியமைப்பதற்கு வழிவகுக்கும். எல்லா மாநிலங்களிலும் நாஜி வதை முகாம் பாணியிலான வதை முகாம்கள் அமைக்கும் பணிகள் துவங்கிவிட்டன. அசாமில் 10 முகாம்களும், 1 முகாம் நவி மும்பையிலும், 1 முகாம் கர்நாடகாவிலும் (நீலமங்களா) செயல்படத் துவங்கிவிட்டன. நாடு முழுவதும் 6 லட்சம் கோடி செலவில் இம்முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. ஏகாதியத்திய நிதியாதிக்க கும்பல்களின் நெருக்கடியையும், இந்திய தரகு வர்க்க கும்பல்களின் நெருக்கடியையும் தீர்த்து அவற்றின் கால்களை நக்கிப் பிழைக்கவே மோடி கும்பல் இந்த ஈனத்தனமான நீசத்தனமான துரோகச் செயல்களில் ஈடுபடுகின்றன.
இந்து ராஜ்ஜியத்தின் வதை முகாம்களில் இசுலாமியர்கள் மட்டுமன்றி ஈழத்தமிழர்களும், பிற மாநிலங்களுக்கு பிழைப்பைத் தேடி செல்லும் உள்நாட்டு அகதிகளும் (அதாவது இந்து மதத்தில் இருக்கிற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள், நாடோடிகள் மற்றும் பழங்குடிகள்) அடைக்கப்பட உள்ளனர். இந்தியாவில் இந்து மதத்திலுள்ள நடுத்தர வர்க்கத்தில் 15 % குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை. இந்து மதத்திலுள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் 28 % குழந்தைகளுக்கும், தாழ்த்தப்பட்ட பிரிவில் 39% குழந்தைகளுக்கும், பழங்குடிகளில் 44% குழந்தைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் இல்லை. இவர்கள் குழந்தைகள் முகாம்களில் (Juvenile camps) அடைக்கபடுவர். எந்த ஆவணமும் இல்லாத சுமார் 80 இலட்சம் நாடோடி இன மக்கள் மற்றும் பிரிட்டன் அரசால் ஆதிவாசி குற்றப் பரம்பரைஎன வதை முகாம்களில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டு மிஞ்சியுள்ள கோடிக்கணக்கான ஆதிவாசிகளும் வதை முகாம்களில் அடைக்கப்படவுள்ளனர். இது கற்பனை அல்ல. இதுதான் அசாமில் நடந்து வருகிறது. வதை முகாம்களுக்கு செல்ல மறுத்த ஆயிரக்கணக்கான அசாமியர்களின் வீடுகள் நாசப்படுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அசாம் முகாம்களில் இதுவரை இந்துக்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்துள்ளனர். 

இந்த முகாம்கள் இந்தியாவின் குவாண்டனோமா(Guantanamo detention camps) வதை முகாம்களகாக, ‘நாஜிவதை முகாம்களாக செயல்படும். கேடு கெட்ட இந்த இந்து நாடுதான் ஆன்லைன் வர்த்தகம் மூலம் இந்து வணிகர்களை நடுத்தெருவில் நிறுத்தி, பல லட்சம் இந்து விவசாயிகளை கொன்று குவித்து வருகின்றது. எனவே இந்து ராஜ்ஜியம் இசுலாமியர்களுக்கு எதிரானது மட்டுமின்றி இந்துக்களுக்கும் எதிரானதே என்பது எளிதில் விளங்கும்.

ஹிட்லரின் நாஜி வைகைப்பட்ட-இந்த ஈனத்தனமான-கழிசடையான நூரம்பார்க் குடியுரிமைச் சட்டங்களையும், நூரம்பார்க் படுகொலைகளையும் நாம் அனுமதிக்கப் போகிறோமா? இன்னொரு யூதப் படுகொலையை-ரோஹிங்கியா படுகொலையை-ருவாண்டா படுகொலையை-குஜராத் படுகொலைகளை-இரத்த வேட்டையை- பிணக்காட்டை-காட்டுமிராண்டித்தனத்தை நாம் அனுமதிக்கப்போகிறோமா? அவ்வாறு அனுமதித்தால் நம்மை மனிதர்கள் என்று அழைத்துக்கொள்ள நமக்கு அருகதை உண்டா?
இவ்வாறு தேசிய இனங்களின் சிறைக் கூடமாக உள்ள இந்தியத் துணைக் கண்டம், தேசிய இனங்களின் வதை முகாம்களாக-கொத்தடிமைத் தளங்களாக-கொலைக் களங்களாக மாற்றப்பட்டு ஏகாதியத்திய நிதி மூலதனத்தின் ஆதி திரட்டல் வடிவிலான சுரண்டலுக்கு ஆட்படவுள்ளன. அதாவது மனிதர்களும், மூலப் பொருட்களும், உற்பத்தி சக்திகளும், இயற்கை வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதன் ஊற்றுக்கண் ஏகாதியத்திய நிதி மூலதன காலனியாதிக்கமே.
ஏகாதிபத்தியங்களின் நெருக்கடிகளை தீர்க்கவே இந்து ராஜ்ஜியம்!
ஏகாதியத்திய நாடுகளுக்கிடையில் முரண்பாடுகளும், பூசல்களும் தீவிரம் பெற்று வருகின்றன. அமெரிக்க-நேட்டோ முகாமிற்கும், சீன-இரசிய முகாமிற்குமிடையில் உலகை மறு பங்கீடு செய்வதற்கான பனிப்போர்துவங்கியதால் அவற்றின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகின்றது. குர்தீஸ்தான் படைகள் மீதும், ஈரான், ஈராக வெனிசுலா மற்றும் சிலி போன்ற ஒடுக்கப்பட்ட நாடுகள் மீதும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற புதிய காலனிய நாடுகள் மீதும், ஏகாதியத்திய நாடுகளின் காலனியாதிக்கமும், பாசிசமும், போர் வெறியும் அனுதினமும் ஆழமாக திணிக்கப்பட்டு வருகின்றன. நெருக்கடியின் சுமைகள் இந்தியா போன்ற ஒடுக்கப்பட்ட புதிய காலனிய நாடுகள் மீதே சுமத்தப்படுகின்றன. அந்நிய நிதி மூலதன நெருக்கடியானது இந்தியாவில் நெருக்கடியை ஆழப்படுத்துகிறது. இந்தியாவின் தேசிய உற்பத்தி 2% சதத்திற்கும் கீழ் வீழ்ந்து விட்டது. இதனால் வறுமை, வேலைவாய்ப்பின்மை பஞ்சம், பட்டினி சாவுகள், தலைவிரித்தாடுகின்றன. மக்கள் போராட்டங்களில் ஈடுபடத் துவங்குகின்றனர். இப்போராட்டங்களை நசுக்கி பிளவுபடுத்தி மக்களை மேலும் ஒட்டச் சுரண்டவே மோடி கும்பல் பாசிசத்தை கட்டியமைத்து வருகிறது. காஷ்மீர் தேசிய இனத்தை 370 இரத்தின் மூலம் துண்டாடியது; பாபர் மசூதியை காவிக் கிரிமினல்களிடம் ஒப்படைக்கும் தீர்ப்பை பெற்று இசுலாமியர்களின் மத உரிமையைப் பறித்தது மோடி கும்பல்; தற்போது குடியுரிமைச் சட்டங்கள் மூலம் அவர்களின் குடியுரிமையையும் பறிப்பது என பாசிசம் தீவிரம் பெற்று வருகிறது. இதன் பொருட்டே தேசிய இனங்கள் துண்டாடப்பட்டு அவற்றின் சந்தைகள் ஒருமுகப்படுத்தப்பட்டு மையப்படுத்தப்படுகின்றன. தற்போது இந்து ராஜ்ஜிய குடியுரிமைச் சட்டங்கள் இந்த தேச துரோகத்தனத்தை மேலும் தீவிரப்படுத்தவே அமல்படுத்தப்படுகின்றன.
வடகிழக்கு தேசிய இனங்களின் வளங்களை கொள்ளையடிக்கும் கிழக்கில் செயல்படும் கொள்கை 2014
இச்சட்டங்கள் சட்ட விரோத குடியேற்றங்களைத் தடுக்கும் சட்டம் என்று மோடி கும்பல் கூறுவது பச்சையான பொய்யாகும். உண்மையில் 6 மதப்பிரிவினருக்கும்,வடகிழக்கு மகாணங்களிலுள்ள பழங்குடி வாழ் பகுதிகளுக்கும் விலக்கு அளித்துள்ளதன் மூலமும் அப்பகுதிகளில் சட்ட விரோத குடியேற்றத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளது மோடி மஸ்தான் அரசு. வடகிழக்கு மாகாணங்களின் மலைவாழ் பகுதிகளில் (பழங்குடி வாழ்பகுதிகள்) இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள் கொட்டிக் கிடப்பதால் அப்பகுதிகளில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது; காரணம், வட கிழக்கு தேசிய இனங்களை பழங்குடிகள்-இந்து-இசுலாம் வங்காளிகள் என துண்டாடி, இந்த பல்முனை முரண்பாடுகளின் ஊடாக ஏகாதிபத்திய ஆதிக்கத்தை அங்கு வலுவாக நிறுவத் துடிக்கிறது மத்திய அரசு. அப்பகுதிகளில் மோடி கும்பல் அமெரிக்க ஏகாதியத்திய நிதியாதிக்க கும்பல்களின் நலன்களுக்காக அந்நாட்டுடன் போட்டுள்ள கிழக்குப் பகுதிகளில் செயல்படுவது 2014 (Act East 2014)எனும் ஒப்பந்தத்திற்காக இந்த சதித்தனத்தை செய்துள்ளது மோடி அரசு. கிழக்கில் செயல்படும் கொள்கை (Act East policy) எனும் பெயரில் மன்மோகன் கும்பல் 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தமே தற்போது கிழக்கில் செயல்படு 2014என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. சீனாவுடன் வடகிழக்கு மாகாணங்களை இணைக்கும் புதிய பட்டுச் சாலையின் (New silk Road-One belt One Road) ஒரு பகுதியாக ஸ்டிட் வெல் சாலை (Stidwel Road) அமைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சீனாவுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஜிக்கா எனப்படும் ஜப்பானின் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்துடன் ஜப்பான்-வடகிழக்கு மாகாண சாலை அமைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் மோடி அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்து ராஜ்ஜியம் என்பது அந்நிய நிதி மூலதனத்திற்கு குடியுரிமை வழங்கும் புதிய காலனிய சாம்ராஜ்ஜியம் என்பதற்கு இதை விடவும் ஆதாரம் தேவையா

இந்தியா மீதான அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கத்தை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தையும், அதை ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு தேச விடுதலைப் போராகவும் வளர்த்தெடுக்கவேண்டிய நேரமிது. 
ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் இந்து ராஜ்ஜிய குடியுரிமை சட்ட-திட்டங்களை முறியடிக்க முடியும்!!
மோடி கும்பலின் குடியுரிமைச் சட்டங்கள் பற்றிய பிரச்சனை உண்மையில் ஒரு தேசிய இனப் பிரச்சனை ஆகும். ஆனால் இது ஒரு மதப் பிரச்சனையாக முன்னிறுத்தப்படுவதும், அதற்கு முதலாளித்துவ தேசியவாதிகள் பலியாவதும் இந்து ராஜ்ஜிய எதிர்ப்புப் போராட்டங்களை பலவீனப்படுத்தவே செய்யும். ஒரு தேசிய இனத்திற்குள்ளும், தேசிய இனங்களுக்கு இடையிலும் மக்கள் புலம் பெயர்வதற்கு காரணம் புதியகாலனி அரசியல் பொருளாதாரக் கொள்கைகளே ஆகும். எனவே நாம் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போரிட வேண்டுமே தவிர அசாம், திரிபுரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களும் தங்களுக்குள் பகையை வளர்த்து மாண்டுவிடக்கூடாது. மத்திய அரசை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடக்கும் சூழலில் அயலாரை வெளியேற்று என பீகார் தொழிலாளிக்கு எதிராக முழங்குவது அப்பட்டமான முதலாளிய தேசியவாதமே. இது மறைமுகமாக இந்து ராஜ்ஜியத்திற்கு சேவை செய்வதே.
பாஜக ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ஆரிய மாயைகளை எதிர்த்து போரிட கால்ட்வெல் பாதிரியின் திராவிட இன மாயை மாற்றாகுமா? நிச்சயம் இல்லை. ஏனெனில் இவ்விரு கருத்தாக்கங்களும் ஜோன்ஸ்- கால்ட்வெல் போன்ற ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் உருவாக்கிய கற்பனையான கோட்பாடுகளாகும். ஆரியம் திராவிடம் இரண்டும் ஏகாதிபத்தியத்தின் கள்ளக் குழந்தைகளே. ஒன்று காவி மடம். மற்றொன்று கருப்பு மடம். ஆரிய மாயைக்கு மாற்று திராவிட மாயை அல்ல. திராவிட இனவாதம் தமிழ் தேசிய உணர்வு வளர்வதற்கு பெரும் தடையாக உள்ளது. ஆரிய - திராவிட இனவாத மாயைகள் பழைய காலனியத்திற்கு சேவை செய்தது போலவே புதிய காலனியத்திற்கும் சேவை செய்கிறது.
கோல்வால்கர், சாவர்க்கர் போன்ற ஏகாதிபத்திய கைக்கூலிகளின் இந்துத்துவ கோட்பாட்டின் நடைமுறை வடிவமே இந்து ராஜ்ஜியம் என்பதை அனைத்து தேசிய இனங்களும் உணர்ந்து ஒன்றாக போராடவேண்டும். கோல்வால்கர் கூறுவதாவது, “இந்திய மண்ணை தாய் பூமியாகவும், புனித பூமியாகும் கருதுபவர்களே இந்தியர்கள்; இஸ்லாமியர்களுக்கு புனித பூமி மெக்கா; கிறித்தவர்களுக்கு புனித பூமி ஜெருசலம்; எனவே அவர்கள் இந்தியர்களாக கருதப்பட மாட்டார்கள்என்கிறார். நாம் அல்லது நமது தேசியத்தை வரையறுத்தல்என்ற நூலில் அவர் மேலும் கூறுவதாவது இந்துக்கள் அல்லாதோர், இந்து பண்பாடு மற்றும் மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்; இந்து மதத்தை மதிக்க வேண்டும்; இந்து இனத்தை புகழ் பாட வேண்டும்; அவர்கள் இந்து நாட்டிற்கும் முழுதும் கீழ்ப்படிய வேண்டும்; எந்த உரிமையும் கோரக் கூடாது; எந்த சிறப்புரிமைகளையும் விரும்பக் கூடாது; குடியுரிமையைக் கூட கோரக்கூடாது; இவற்றை ஏற்றுக் கொண்டு இந்தியாவில் வாழலாம்; இல்லையெனில் அவர்கள் அயல்நாட்டினர் என்றே கருதப்படுவார்கள்என்கிறார். சாவர்க்கர் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒரே நாட்டில் ஒன்றாக வாழ முடியாதுஎன்று கூறுகிறார். அவர் இந்து நாடு-முஸ்லிம் நாடு என்ற இரு நாட்டுக்(Two Nation Theory) கொள்கையை முன்வைக்கிறார். மேற்கூறப்பட்ட காவிக் குண்டர்களின் கொள்கைகளே தற்போது குடியுரிமைச் சட்டம், பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதை நாம் ஒருகாலும் அனுமதிக்க இயலாது. தேச பக்தர்கள் அனைவரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒத்துழையாமை இயக்கத்தையும்-தேச விடுதலைப் போரையும் முன்னெடுக்க வேண்டிய தருணம் இது. 

ஒத்துழையாமை இயக்கம் என்றால் என்ன?
தொழிலாளர்கள்-விவசாயிகள் தலைமையிலான ஒத்துழையாமை இயக்கத்தில் மாணவர்கள், பெண்கள், வணிகர்கள், தேசிய முதலாளிகள், மீனவர்கள், மா-லெ குழுக்கள், புரட்சிகர சனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழையாமை இயக்கத்தினை மக்கள் மத்தியில் கட்டியமைக்க வேண்டியுள்ளது.
1.         மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளிடமும், கணக்கெடுக்க வருபவர்களிடமும் எந்தத் தகவல்களையும், ஆவணங்களையும் தர மறுப்பது;
2.         பதிவேடு திட்ட அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ள மறுப்பது; வதை முகாம்களுக்கு செல்ல மறுப்பது;
3.         இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது; இந்து-இசுலாமியர் ஒற்றுமையை எடுத்துக் காட்டும் போராட்டங்களை முன்னெடுப்பது;
4.         அந்நியப் பொருட்களை வாங்க மறுப்பது; அந்நியப் பொருட்களை எரிப்பது;
5.         வரி செலுத்த மறுப்பது; கார்ப்பரேட்டுகளை வரி கட்டச் சொல்லுமாறு போராடுவது;
6.         அவசியமற்ற பொருட்களை வாங்க மறுப்பது; அரசு விழாக்கள், திருமணம், பண்டிகைகளை புறக்கணிப்பது;
7.         எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடவும், வாக்களிக்கவும் மறுப்பது.
8.         வங்கிகளைப் புறக்கணிப்பது; காவல்துறை, சிறைத்துறை மற்றும் நீதிமன்றத்தை புறக்கணிப்பது;
9.         அரசு ஊழியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கு கொள்ள மறுப்பது; அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கும், மாணவர்கள் கல்லூரிகள் பள்ளிகளுக்கும் செல்ல மறுப்பது;
10.       குடியுரிமைச் சட்டங்களை ஆதரித்து துரோகமிழைத்த பாராளுமன்ற உறுப்பினர்களை முற்றுகையிடுவது; பதவி விலக கோரி போராடுவது;
போன்ற ஒத்துழையாமை இயக்கங்கள் மூலம் இந்து ராஜ்ஜிய சட்டங்களை உறுதியாக நிர்மூலமாக்க முடியும். ஒத்துழையாமை இயக்கங்களை அலை அலையாக கட்டியமைத்து மக்கள் எழுச்சியை உருவாக்குவதும், வெடித்துக் கிளம்பும் போராட்ட நெருப்பை நாடெங்கும் பற்றிப் பரவச் செய்தும் நிச்சயம் குடியுரிமை சட்டங்களை சாம்பலாக்கும். அத்தகைய ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு சுதந்திரப் போருக்கு அனைவரும் கிளர்ந்தெழ வேண்டிய மிகச் சரியான தருணம் இது.

சமரன்
ஜனவரி 2020

No comments:

Post a Comment